மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

இரட்சிப்பின் ஏழு நிச்சய அடையாளங்கள்.

உண்ம்மையான் இரட்சிப்பில் வெளிப்படும் வெளி அடையாளங்கள் உண்டா? ஆம் உண்டு. நமது முற்பிதாக்களால் கிருபையின் அடையாளங்கள் என்று அழைக்கப்பெற்ற இரட்சிப்பின் அடையாளங்கள் அநேகம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1யோவான், ரோமர் 8ம் அதிகாரத்தில் இரட்சிப்பின் அடையாளங்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்தவ நடைமுறையில் காணப்படும் அடையாளங்களை தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றன. பெந்தெகொஸ்தே நாளில் இரட்சிகப்பட்டவர்களின் மனப்பான்மையிலும், வாழ்க்கையிலும் காணப்பட்ட மாற்றத்தை அப்போஸ்தலர் நடபடிகள் 2:37-38,41-47 ஆகிய வசனங்களில் நாம் காண்கிறோம்.


37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.42. அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.43. எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.44. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.45. காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.


மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்

  1. பாவத்தை குறித்த உணர்வு
  2. வேதத்தை விளங்கிக் கொள்ளுதல்
  3. கிறிஸ்தவ ஐக்கியம்
  4. ஜெபத்தில் ஆர்வம்
  5. புதிய இருதயம்
  6. இரட்சிப்பைக் குறித்த ஆரம்ப நிச்சயம் 
  7. சாத்தானின் தாக்குதல்

பீட்டர் மாஸ்டர்ஸ் அவர்கள் எழுதின புத்தகத்தின் சுருக்கம். இந்த புத்தகம் புதிதாய் இரட்சிக்கப்பட்ட நபர்களுக்கும், இரட்சிப்பின் நிச்சயத்தை பற்றிய கேள்வியோடு வாழும் நபர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக அமையும். 

இந்த புத்தகத்தை பெற்று வாசிக்க விரும்புவோர் எங்களது Email-க்கு உங்களது முகவரியை அனுப்பவும்.

Email Id: [email protected]