சங்கீதம் 1:2

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” 

1. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து:

சங்கீதம் முழுவதிலும், கர்த்தருடைய வேதம் என்ற பதம் கடவுளுடைய வார்த்தை அடங்கிய முழு வேதத்தைக் குறிக்கிறது. “கர்த்தருடைய வேதம்” என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து நூல்களுல் குறுகிவிடவில்லை. நீதிமான் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருக்கிறான்.

அ) உன்னை எது மகிழ்விக்கிறது? உன்னை எது உற்சாகப் படுத்துகிறது? உனக்கு எது முக்கியம் என்பதை கண்டுபிடிக்க இது ஒரு நல்ல வழி. சில மனிதர்களுக்கு, தனிப்பட்ட இன்பம் தான் அவர்களை மகிழ்விக்கும் காரியமாக இருக்கும். மற்ற சிலருக்கு, குடும்பத்தோடு இருப்பதும், நண்பர்களோடு இருப்பதும் பிரியமாக இருக்கும். ஆனால் நீதிமானோ, அவனுடைய ஆசை கர்த்தருடைய வேதத்தில் இருப்பதை கண்டுபிடிக்கிறான்.

ஆ) “மனிதனுக்கு நிச்சயம் சில ஆசைகள், சில உயர்வான ஆசைகள் இருக்கும். அவனுடைய இருதயம் ஒருபோதும் வெறுமையாக இருக்காது. சிறப்பான காரியங்களால் நிரப்பப்படாவிட்டால், அது தகுதியற்றதாலும் மற்றும் ஏமாற்றங்களாலும் நிரம்பும்.” (ஸ்பர்ஜன்). இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தைதான் மிகவும் சிறப்பானது.

இ) ஒரு மனிதன் எதிலாவது பிரியப்பட்டால், அதை செய்யும்படியோ அல்லது அதை விரும்பும்படியோ அவனுடைய செயல் காணப்படும், நீங்கள் அவனை வற்புறுத்த தேவை இல்லை. அவன் அவைகளையெல்லாம் தானாகவே செய்வான். தேவனுடைய வார்த்தையில் நீ எவ்வளவு பிரியமாக இருக்கிறாய் என்பதை நீ அதற்கு எவ்வளவு ஏங்குகிறாய் என்பதை வைத்து அளவிட்டு விடலாம்.

தேவனுடைய வார்த்தையில் நீ எவ்வளவு பிரியமாக இருக்கிறாய் என்பதை நீ அதற்கு எவ்வளவு ஏங்குகிறாய் என்பதை வைத்து அளவிட்டு விடலாம்.

2. இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிறான்:

நீதிமான் தேவனுடைய வார்த்தையை சிந்திக்கிறான். அவன் வெறுமனே அவைகளை கேட்டு மறந்துவிடுவதில்லை; அவன் அதை தியானிக்கிறான். கிறிஸ்தவன் என்பவன் தேவனுடைய வார்த்தையை தியானிக்க வேண்டும்.

அ) நவீன கால தியானங்களில், மனத்தை வெறுமையாக்குவதே இலக்காக இருக்கிறது. இது ஆபத்தானது. ஏனென்றால், வெறுமையான மனம் என்பது வஞ்சனைக்கும் அசுத்த ஆவிக்கும் திரந்த அழைப்பாக காணப்படும். ஆனால், கிறிஸ்தவ தியானத்தில், தேவனுடைய வார்த்தையால் உன் மனதை நிரப்புவதே இலக்கு. ஒவ்வொரு வார்த்தையையும் பதத்தையும் கவனமாக சிந்திப்பதின் மூலமாகவும், அதை அவன் வாழ்வில் அப்பியாசப்படுத்துதலின் மூலமும், அதை திரும்பி கர்த்தரிடம் ஜெபிப்பதின் மூலமும் இது சாத்தியப்படும்.

ஆ) “தியானம் என்பது கர்த்தருடைய வார்த்தையை அசை போட்டு அதன் இனிமையையும் போஷாக்கையும் இருதயத்திலும் வாழ்விலும் பெறுவது: இதுவே தெய்வபக்தியுள்ள மனிதன் கனிகொடுக்கும் வழி.” (ஸ்பர்ஜன்)

தியானம் என்பது கர்த்தருடைய வார்த்தையை அசை போட்டு அதன் இனிமையையும் போஷாக்கையும் இருதயத்திலும் வாழ்விலும் பெறுவது: இதுவே தெய்வபக்தியுள்ள மனிதன் கனிகொடுக்கும் வழி.

இ) அநேகரிடம் இருக்கும் குறைபாட்டிற்கு காரணம் அவர்கள் வாசிக்கிறார்களே தவிற தியானிப்பது இல்லை. “வாசிப்பது மாத்திரம் நமக்கு நன்மையைக் கொண்டுவருகிறதில்லை; ஆன்மா அதனால் போஷிக்கப்பட்டு அதை அசைப்போட வேண்டும். ஒரு பிரசங்கி ஒருமுறை தான் இருபதுமுறை வேதத்தை முழங்காளில் நின்றபடியே வாசித்ததாகவும் தெரிந்துகொள்ளுதல் என்ற போதனையை ஒருபோதும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் என்னிடம் கூறினார். அது நடக்காது. வாசிப்பதற்கு அது மிகவும் அசௌகரியமான நிலை. அவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசித்திருந்தால் அவரால் ஒருவேலை புரிந்துகொள்ள முடிந்திருக்கும்.” (ஸ்பர்ஜன்)

{ஈ) இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிப்பது என்பது, நீதிமான் நாள் முழுவதும் அவருடைய வார்த்தையினால் நிறைந்திருக்கிறான் என்பதை குறிக்கிறது.

Pastor Amresh Semurath