I யோவானிலிருந்து மெய்யான கிறிஸ்தவனின் அடையாளங்கள் 

அதிகாரம் 1

  1. ஒளியில் நடப்பவன்  [Iயோவான் 1:6]
  2. ஒளியில் நடக்கின்ற மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியமுள்ளவன்  [Iயோவான் 1:7]
  3. அவனுள் பாவ சுபவாம் உள்ளதை அறிந்தவன்  [Iயோவான் 1:8]
  4. அவ்வப்போது பாவம் செய்பவன் [Iயோவான் 1:10]

 

அதிகாரம் 2

  1. தொடர்ச்சியாக கட்டளைகளை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:3, 3:24]
  2. தொடர்ச்சியாக வசனத்தை கைக்கொள்பவன்   [Iயோவான் 2:5]
  3. அவர் நடந்ததுபோல தானும் நடப்பவன்  [Iயோவான் 2:6]
  4. சகோதரனை பகைக்காதவன்  [Iயோவான் 2:9]
  5. சகோதரனிடத்தில் அன்பு கூறுபவன் [Iயோவான் 2:10, 3:10]
  6. உலகத்தில் அன்பு கூறாதவன் [ Iயோவான் 2:15]
  7. உலகத்தில் உள்ளவைகளில் அன்பு கூறாதவன்  [Iயோவான் 2:15]
  8. அவன் தேவனின் சித்தத்தின்படி செய்பவன் [Iயோவான் 2:17 ]
  9. அவன் கிறிஸ்தவன் சரீரத்தில் நிலைத்திருப்பவன்  [Iயோவான் 2:19]
  10. சுவிசேஷத்தின் சத்தியத்தை அறிந்ததினால் அபிஷேகம்பெற்றவன் [Iயோவான் 2:20, 21]
  11. அவன் இயேசுவை மேசியா என்று அறிந்தவன் [Iயோவான் 2:22, 5:1]   
  12. கிறிஸ்துவில் நிலைத்திருப்பவன் (செடியும் – கொடியுமாக யோவான் 15)   [Iயோவான் 2:27-28]
  13. அவன் தொடர்ச்சியாக நீதியை பயிற்சிப்பவன் [Iயோவான் 2:29; 3:10]

 

அதிகாரம் 3

  1. அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல் தன்னையும் சுத்திகரித்துக்கொள்பவன்  [Iயோவான் 3:3.]
  2. தொடர்ச்சியாக பாவம் செய்யாதவன் [Iயோவான் 3:6; 5:18.]
  3. அவர் நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல தானும் நீதியுள்ளவராய் இருக்கிறான் [Iயோவான் 3:7.]
  4. அவன் தேவனால் பிறந்தபடியால் பாவம் செய்யான். ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் இருக்கிறது [Iயோவான் 3:9.]
  5. சகோதரனிடம் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:14.]
  6. வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூறுபவன் [Iயோவான் 3:18-19.]
  7. பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருப்பதினால் இரட்சிப்பின் நிச்சயத்தை கொண்டவன் [Iயோவான் 3:24, 4:2]  

 

 அதிகாரம் 4

  1. அவன் மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைபண்ணுகிறவன் [Iயோவான் 4:2]
  2. அவன் அந்திகிறிஸ்துவின் ஆவியை அறிந்தவன் [Iயோவான் 4:3-4]
  3. அவன் அப்போஸ்தல உபதேசத்தை கேட்டு பெற்றுக்கொண்டவன் [Iயோவான் 4:6]
  4. தேவ அன்புள்ளவன் [Iயோவான் 4:7-8]
  5. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுபவன் [Iயோவான் 4:15]
  6. தேவ அன்பில் நிலைத்திருப்பவன் [Iயோவான் 4:16]
  7. அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அன்பு கூறுகிறோம் [ Iயோவான் 4:19]

அதிகாரம் 5

  1. அவன் தேவனால் பிறந்தவன் [Iயோவான் 5:1]    
  2. உலகத்தை ஜெயித்தவன் [Iயோவான் 5:4]
  3. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பவன் [Iயோவான் 5:5 ]

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இதை வாசித்த உங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் காணப்படுகிறதா?

இல்லையென்றால் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை விசுவாசியுங்கள்.