முன்னுரை

அனைவருக்கும்  இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள். இந்த வேத ஆராய்ச்சி கட்டுரையில் நாம் இயேசு கிறிஸ்துவை குறித்ததான காரியங்களை சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பதை இறையியலில் “CHRISTOLOGY”  என்ற பதம் பயன்படுத்தப்படும். இயேசு கிறிஸ்துவை பற்றிய ஆய்வு / படிப்பு என்று பொருள்.  அதிலும் குறிப்பாக நாம் இயேசு கிறிஸ்துவை வேதம் எப்படியாக அடையாளப்படுத்தி, அவருடைய ஊழியத்தை விவரிக்கிறது என்பதை நாம் சிந்திக்கயிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி படிப்பது  விசுவாசிகளுக்கு ஆறுதலும்,விசுவாசத்தில் முதிர்ச்சியடைவதற்கும், அவருக்கு பணி செய்வதற்கும் உற்சாகமளிக்க கூடியதாய் இருக்கும். நாம் இந்த கட்டுரையில் யோவான் 12:21–ல் கிரேக்கர்கள், பிலிப்புவினிடத்தில் வந்து, ஐயா, “இயேசுவை காண விரும்புகிறோம்” என்று கேட்டார்கள். அதையே நம்முடைய ஜெபமாக வைத்து, தேவனே, இயேசுவை காண கிருபை செய்யும் என்ற சிந்தனையோடே  பின் வரும் காரியங்களை சிந்திப்போம்.

பிலிப்பியர் 2:11-ல், பிதாவானவர் இயேசு கிறிஸ்துவுக்கு “எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்” என்று வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அவருக்கு பெயர் அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருகிறது. (எ.டு)  1.இயேசு கிறிஸ்து – தேவ ஆட்டுக்குட்டி,  2. மனுஷகுமாரன், 3.பிரதான ஆசாரியன்,  4.தீர்க்கதரிசி,  5.ராஜா,  6. தேவனுடைய ஊழியக்காரர் போன்ற அடையாளங்கள் வேதாகமம் முழுவதுமாக இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் பிரதானமான அடையாளமாகவும், அவருடைய பணியை குறிக்கிறதாகவும் இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை பற்றி தியானிப்பதும், அவரை நேசிப்பதும் விசுவாசிகளின் அடிப்படை வேலையாக இருக்க வேண்டும்.  இயேசுவை பற்றி தியானிப்பதை நாம் இரண்டாம் பட்சத்தில் தான் வைத்திருக்கிறோம். பவுல் பிலிப்பியரில் ‘கிறிஸ்து எனக்கு ஜீவன்’ என்று கூறுகிறார். எபிரெயர் ஆசாரியரும் “இயேசுவை கவனித்து பாருங்கள்” என்று விசுவாசிகளுக்கு கூறுகிறார்.  இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ்வதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது எப்படி பழக்கமாகும்? இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரத்தியேகமாக  பேசும் வேத பகுதிகளை சரியாக தியானிப்பதின் மூலமாக மட்டுமே, நம் வாழ்வில் இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ முடியும்.

இயேசுவைப் பற்றி வேதாகமத்தில் 

வேதாகமத்தில் முதல் முதலில் இயேசு கிறிஸ்துவை பரிசுத்த ஆவியானவர் எப்படியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்? இயேசு கிறிஸ்துவை பற்றி முதலில் வேதாகமத்தில் எங்கு வாசிக்கிறோம்? இயேசு கிறிஸ்துவைக் குறித்து படிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது நல்லது? புதிய ஏற்பாட்டில் ஆ? அவருடைய பிறப்பில் இருந்தா? தீர்கதரிசனத்தில் இருந்தா?

ஆதியாகமத்தில்  இருந்து நாம் இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தையும், அவருடைய பணியையும் நாம் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அங்கே தான் முதலாவது மீட்பரின் அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதியாகமம்3:15  உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.  “இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த ஆதியாகமம் 3:15-ன் பின்னணி மிகவும் பரிட்சயமானது.

ஆதியாகமம்

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் தேவன் எப்படி படைத்தார் என்றும், ஆதியாகமம் 2ம் அதிகாரம் மனிதனை படைத்தலின் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் ஆதாமையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். வைத்து சில பொறுப்புகளையும் கட்டளைகளையும் அவர்கள் கைக்கொள்ளும்படி கொடுத்தார். கீழ்ப்படிந்தால் வாழ்வு, கீழ்ப்படியவில்லை என்றால் மரணம் ஆதியாகமம் 2:17 “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”  ஏன் இப்படி ஒரு கட்டளை? ஆதாமும், ஏவாளும் தேவனை எவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள், விசுவாசிக்கிறார்கள், கீழ்ப்படிகிறார்கள் என்பதை வெளிப்படுத்தவே இந்த கட்டளையை தேவன் கொடுக்கிறார். இது தான் விசுவாச வாழ்வு. அவரை நேசித்தல்,விசுவாசித்தல், கீழ்ப்படிதல் வேதம் ஆரம்பம் முதல் இதை தான் சொல்லி வருகிறது.ஆனால் சர்ப்பம் வஞ்சித்தது, தேவன் கூறினதற்கு ஏவாள் செவிகொடமால் வீழ்ந்து போனாள். ஏவாள் எதை பார்த்தாலோ அதின் அடிப்படையில் யோசித்து செயல்பட்டால். விசுவாசிகளுக்கு தேவன் கொடுத்த ஒரு கொள்கை என்னவென்றால்,தேவனுடைய வார்த்தைக்கு செவிக்கொடுக்க வேண்டும். கண்ணால் பார்ப்பது முக்கியமல்ல. செவிகொடுப்பதே பிரதானமானது. பார்க்க வைத்து வஞ்சிப்பது சாத்தானின் செயல்.ஆதியாகமம்3ம் அதிகாரத்தில் தேவன் இவர்கள் பாவத்தை கண்டறிந்து வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை நியாயப்படுத்துகிறார்கள். தேவன் அதற்கான தண்டனையை கொடுக்கிறார்.

 

ஆதியாகமம் 3:17ஆதாமுக்கு கொடுத்த தண்டனை
ஆதியாகமம் 3:16ஏவாளுக்கு கொடுத்த தண்டனை
ஆதியாகமம் 3:14,15சர்ப்பத்திக்கு கொடுத்த தண்டனை

 

 

 

 

சர்ப்பத்திற்கு கொடுத்த சாபத்தில் தான் மகிமையான சுவிசேஷத்தின் நம்பிக்கையடங்கி இருக்கிறது. ஆதியாகமம் 3:14,15 “ அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

கவனிக்கவும் ஆதியாகமம் 3:15 –ல், இரண்டு வித்துக்கு இடையே பகைஸ்திரீயின் வித்து – சர்ப்பத்தின் வித்து.

இது தான் சுவிசேஷத்தின் முதல் அடிப்படையான பார்வை. இயேசு இந்த உலகத்திற்கு வந்த போது, பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார். எப்படி இயேசு பிசாசின் கிரியைகளை அழித்தார்? அவருடைய வாழ்வு, ஊழியம்,மரணம்,உயிர்தெழுதல் மூலமாக வெளிப்படுகிறது. ஆதியாகமம் 3:15 –ல்,  இயேசு கிறிஸ்துவின் வருகையையும், அவருடைய பணியையும் குறிக்கிறது.

வசனம் 15

 1) உனக்கும் ஸ்திரீக்கும்  – யாருக்கு இடையே பகை.

          2 ) உன் வித்து, அவள் வித்து – ஆதாம் ஏவாளை தாண்டியும் இந்த பகை தொடரும்.

3) பகை எப்பொழுது உச்சகட்டம் அடையும் – அவர் உன் தலையை நசுக்கும்போது.

ரோமர் 16:20, வெளிப்படுத்தல் 12:9, யோவான் 8:44  தொடரும் பகை:- தொடர்ந்து மோதல் பிசாசானவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு பகைஞன் என்பது வேதத்தின் அடிப்படையான சத்தியம். அந்த பகையை ஆதியாகமம் 4- ம் அதிகாரத்தில் காயீன் – ஆபேல் ஆதியாகமம் 11- ல்,  பாபேல் கோபுரம், இஸ்ரவேல் – எகிப்து, தாவீது – கோலியாத், இயேசு – பிசாசு, யூதர்கள் – இயேசு பகை இன்றும் தேவனுடைய சபைக்கு விரோதமாக உள்ளது. அப்போஸ்தலர் 7:54 ; 8:3  ஸ்தேவான் கொலை – பவுலின் உபத்திரவம்.   இன்றும் அந்த பகை தொடர்கிறது. சுவிசேஷத்தின் இயேசுவின் ஊழியத்தில் தொடர்ச்சியான பகை பிசாசின் வித்தில் இருந்து  ஆதியாகமம் 3-ல், இருந்து வெளிப்படுத்தல் 21-22 வரை தோட்டம் – பாவக்காடாய் மாறியது  வெளிப்படுத்தல் 21-22 பாவக்காடு புதிய ஏதேனாய் மாறவுள்ளது.

புதிய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.

இயேசு யார்?

கலாத்தியர் 4:4  “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.” ஸ்திரீயின் இடத்தில் பிறந்தவரும்.இயேசு கிறிஸ்து ஆதியாகமம் 3- 15-ல், ஸ்திரீயின் வித்துவினால் தான் மரியாளை ஸ்திரீ என்றழைக்கிறார்.

யோவான் 2:1-11, காண ஊர் கல்யாணத்தில் “அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.”

யோவான் 19:26 “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.”

ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் பணிகள் என்ன?

இயேசு கிறிஸ்து எதற்காக உலகத்திற்கு வந்தார்? 1யோவான் 3:8 “ பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”

மத்தேயு 2 :16-18 “ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.” இயேசுவை கொலை செய்ய ஏரோது வகைதேடினான்.  ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பிசாசின் வித்துக்கும் பகை தொடர்கிறது. 

மத்தேயு 4:1-11, மாற்கு1:12-13, லூக்கா 4:1-13 சோதனை தொடர்ச்சியாக தாக்குதல், இரண்டாம் ஆதாம் யுத்தம் செய்ய வந்தார்.

மேலே உள்ள இயேசுவின்  சோதனையின் பகுதிகள் என்ன கற்று தருகிறது. எப்படி சோதனையில் அவரை போல வேதத்தை பயன்படுத்தனும்னா? அது சரியாக இருந்தாலும் இயேசுவானவர் பரிசுத்த ஆவியினால் கொண்டுபோகப்பட்டார். பிசாசை சந்திக்க இயேசு கிறிஸ்து போகிறார்.பகையை சந்தித்து  வெற்றி சிறந்து இரட்சிப்பை கொண்டுவந்தார். முதலாம் ஆதாம் சோதனையில் வீழ்ந்தான் இரண்டாம் ஆதாம் சோதனையை மேற்கொண்டு வெற்றி சிறந்தார்.  இயேசுவின் ஊழியத்தை அழிப்பதே பிசாசின் நோக்கம், அதினால் தான் அநேக பிசாசு பிடித்தவர்கள் (லேகியோன்) இயேசுவின் ஊழியத்தில் அநேகம் காணப்பட்டார்கள். பிசாசு பேதுருவையும் பயன்படுத்தினான் மத்தேயு 16:23,  மாற்கு 8:33.

ஆதாம் சாத்தானிடம் தோற்றுபோனான். இயேசு பிசாசை தொடர்ச்சியாக எதிர்த்தார்.

எப்படி?

தொடர்ச்சியாக தன்னுடைய வாழ்வில் முழுவதுமாக தன் பிதாவுக்கு கீழ்ப்படிந்ததின் மூலம். 3 வருடம் ஊழியத்திற்கு பின், இயேசுவும் மரத்திற்கு கொண்டு வரப்படுகிறார். இந்த மரம் பழத்தைக் கொண்டது அல்ல. உயிரை பறிக்ககூடியது. இந்த கீழ்ப்படிதல் அனைத்தையும் மாற்றியது. (ஆதியாகமம் 2:9 வாசிக்கவும். கலாத்தியர் 3:13  சாபம் – அழகு  இங்கு சாபம்.) “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்”பிலிப்பியர்2:8.

முடிவுரை

ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் பணி தொடர்ச்சியாக பிசாசை எதிர்பதாக இருந்தது. இயேசு தன் வாழ்நாள் முழுவதும் பரிசுத்தமாய் வாழ்ந்தார் என்றால், இயேசு தன் வாழ்நாள் முழுவதும் பாவத்தை எதிர்த்து போராடினார். இயேசுவை விசுவாசிக்கிற நாமும் கூட பாவத்தை எதிர்த்து போராட வேண்டும். பாவத்தை மேற்கொள்ள வேண்டும். ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நாமும் அவருடைய வழிகளில் நடக்க வேண்டும். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நம்மை முன்குறித்து இரட்சித்து இருக்கிறார். தேவன் தொடர்ச்சியாக நம்மை பாவத்தை எதிர்த்து போராட கிருபையும் இரக்கமும் பாராட்டுவாராக.