கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 20

தேவன் தெரிந்து கொண்டவர்களின் மீட்பர் யார்?

பதில்

தேவனுடைய குமாரனாயிருந்தவரும், மனிதனாக இருந்தவரும் தொடர்ந்து இவ்விரண்டு நிலையில் இருக்கிறவரும், ஒருவராய், என்றென்றுமாய் இருக்கிறவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே தேவனால் தெரிந்து கொண்டவர்களின் ஒரே மீட்பர்.

வேத ஆதாரம்

1)  1 தீமோத்தேயு 2: 5

  1. “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”

2)  யோவான் 1:14 

  1. “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”

3)  1 தீமோத்தேயு 3:16 (பின்பகுதி)

  1. ” தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.”

4)  கொலோசெயர் 2:9

  1. “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.”