இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையான சத்தியம். இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் கேட்டு அதை ஆராய்ந்து நம்முடைய இருதயத்தில் அதை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். இந்த சத்தியம் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர வேண்டும். அதை போல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நம்மை மெய்யான ஆராதனைக்கு நேராகவும் கொண்டு செல்ல வேண்டும். இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு என்பது அது மகிமையானது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி இன்று ஏளனப் படுத்தப்படுகிறது அவருடைய பிறப்பின் மகிமை உணராமல் இன்று அவருடைய மகிமையை தொடர்ச்சியாக ஜனங்கள் இழிவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பது ஆச்சரியமானது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பது மகிமையானது தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்ற மேன்மை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத தேவனுடைய சத்தியமாக இருக்கிறது. அது மேன்மையான கிருபையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார் என்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து என்ன நோக்கத்திற்காக இந்த உலகத்தில் வந்திருக்கிறார் ?
இந்த கேள்விக்கான பதிலை வேதம் தெளிவாக சொல்லி இருக்கிறது. ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தைப் பார்க்கும்போது இந்த அதிகாரத்தில் எதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வரவேண்டும் என்ற நோக்கத்தை தேவன் ஆதிப்பெற்றோராகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிதாவாகிய தேவன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3:15
இந்த வசனத்தை சிந்திப்பதற்கு முன்பாக ஆதியாகமத்தை குறித்ததான சிறிய அறிமுகத்தை பார்க்காலாம். இந்த வசனத்தை தெளிவாய் புரிந்துக்கொள்ள ஆதியாகமத்தின் பின்னணி அவசியமானது. ஆதியாகமம் பரிசுத்த ஆவியானவருடைய தூண்டுதலினால் மோசேயை கொண்டு தேவன் எழுதினார். மோசே ஐந்து ஆகமங்களை எழுதியிருக்கிறார் என்று இயேசு சாட்சிக்கொடுக்கிறார் என்று லூக்காவில் வாசிக்கிறோம். லூக்கா 24:44 ல் “மோசேயினுடைய நியாயபிரமாணத்தையும் ஆகமத்தையும் வாசியுங்கள்“ என்று இயேசு சொல்கிறார். 2 கொரிந்தியர் 3:15 பவுல் சொல்கிறார். “மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது“. ஆதியாகமம் மற்றுமுள்ள ஆகமங்கள் மோசேவினால் எழுதப்பட்டது என்று வேதமே சாட்சியிடுகிறது.
யாருக்கு இந்த ஆதியாகமம் எழுதப்பட்டிருக்கிறது? எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாகி, கானானை நோக்கி வனாந்தரத்திலே பயணித்துக் கொண்டிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எழுதப்பட்டது.
எதற்காக இந்த ஆதியாகமம் எழுதப்படுகிறது?
- இந்த இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திக் கொண்டு வருகிற தேவன் யார் என்பதை விளக்கப்படுத்துவதற்காகவும்
- மனிதனாகிய நான் யார் என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் எழுதப்பட்டது
- என்னுடைய வாழ்க்கையில பாவம் எப்படி வந்தது, இந்த பாவத்தில் இருந்து எனக்கு எப்படி விடுதலை என்பதை தெரிவிக்கவும்
- தேவன் என்னுடைய வாழ்க்கையில் கொண்டிருக்கிற நோக்கம் என்ன என்பதை எல்லாம் வெளிப்படுத்துவதற்காக இந்த ஆதியாகமம் எழுதப்பட்டது.
ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்கள் என்ன கூறுகிறது ஆதியாகமம் 1:1 – தேவன் யார்? என்று அறிமுகப்படுத்துகிறது. ஆதியிலே தேவன் என்று சொல்லும்போது அவர் திரியேக தேவன் என்பதை வெளிப்படுத்துகிறது. மூல பாஷையில் ஏலோகிம் என்று சொல்லும்போது அது திரித்துவத்தை குறிக்கிறது. ஆதியாகமம் 1:1-25 வாசிக்கும்போது தேவன் எவைகளைலாம் படைத்தார் என்று வாசிக்கிறோம். ஆதியாகமம் 1:26 பார்க்கும்போது திரியேக தேவன் மனிதனை படைத்தார் அவர் ஆணும் பெண்ணுமாக படைத்தார் அவர் தேவ சாயலாக படைத்தார். ஆதியாகமம் 2 பார்க்கும்போது ஆறு நாளில் தேவன் எல்லாவற்றையும் படைத்து வீழ்ச்சிக்கு முன்பாகவே படைப்பு முடிந்த உடனே தேவன் ஏற்படுத்தியது ஓய்வு நாள். படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன்னை படைத்தவரை ஆராதிக்க வேண்டும். அவர்களை திருமணத்தில் இணைத்திருக்கிறார், வேலையை கொடுத்திருக்கிறார். ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனிதனுக்கு பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். தேவன் உயிரைக் கொடுத்தார் மனிதனுக்கு அவன் மனிதனானான் என்று பார்க்கிறோம். ஆதியாகமம் 2:8,15 ஏதேன் தோட்டத்தை உண்டாக்கி அதில் ஆதாமை வைத்தார் என்று பார்க்கிறோம்.ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தர் மனுஷனை பண்படுத்தவும் காக்கவும் வைக்கிறார். ஆதியாகமம் 2:18 ஆதாம் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்று சொல்லி தேவன் ஏவாளை படைக்கிறார் ஏவாளை படைத்தது பின்பு அவர்களை திருமணத்தில் இணைக்கிறார் (ஆதியாகமம் 2:21-22). ஆதியாகமம் 2:16,17 தேவன் சொல்லி இருக்கிறார் தோட்டத்தில் இருக்கிற எல்லா கனியும் நீ புசிக்கலாம் ஆனால் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் அதை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய். பாவம் உலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே தேவன் மரணம் பாவத்தின் சம்பளம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.தேவனுக்கு கீழ்படிந்து அந்த கீழ்படிதல் மூலமாக தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செய்து தேவனை ஆராதித்து வாழ்வதுதான். வீழ்ச்சிக்கு முன் இருந்த நிலை ஆதாமும் ஏவாளும் பூரணமான நிலையில் தேவனோடு நெருக்கமான உறவு இருந்தது. ஆதியாகமம் 3:8 பகலின் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற, ஒரு பழக்கம் தேவனுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். தேவனோடு தினந்தோறும் உறவை பெற்றுக்கொண்டு தேவனிடத்திலிருந்து பரிபூரணமான ஆசீர்வாதத்தையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓய்வு நாள் இருக்கிறது, வேலை இருக்கிறது, திருமணம் இருக்கிறது.
ஆதியாகமம் 3:1 தேவனிடத்தில் தொடர்ச்சியாக ஐக்கியப்பட்டு தேவன் கொடுத்த பொறுப்புகளையும் தேவன் கொடுத்த கடமைகளையும் சரியாக செய்து கொண்டு வாழ்ந்துட்டு இருக்கும் போது பிசாசு ஏவாளை வஞ்சிக்கிறான் என்று பார்க்கிறோம்.
ஆதியாகமம் 3 மிகத்தெளிவாக மனுஷனுடைய பிரச்சனை என்ன?
- ஆதியாகமம் 3:8 – இந்த உலகத்துக்குள்ளாக பாவம் எப்படி நுழைந்தது, ஏவாளை சர்ப்பமானது வஞ்சித்தது தேவன் கொடுத்த கட்டளையை மீற செய்தது.
- ஆதியாகமம் 3:5-6 தேவன் சொல்லி இருக்கிறார் அந்த கனியை சாப்பிடும் நாளிலே நீ சாகவே சாவாய் பிசாசு தேவனுடைய வார்த்தையை திரித்து பேசி ஏவாளை வஞ்சித்தது. தேவனுக்கு எதிராக ஏவாளை திருப்பி அந்த கனியை புசிக்க செய்து தன்னுடைய புருஷனாகிய ஆதாமுக்கும் கொடுத்தாள் ஆதாம் சாப்பிட்ட உடனே பாவம் உலகத்திற்குள்ளே வந்தது.
ஏன் ஆதாம் சாப்பிட்ட உடனே பாவம்?
ஆதியாகமம் 2 தேவன் ஆணை தலைவனாக ஏற்படுத்துகிறார்; தேவன் ஆணை செயல்படுத்தும் பொறுப்பை உடையவனாக ஏற்படுத்துகிறார்;தேவன் ஆணையும் பெண்ணையும் சமமாக படைத்திருக்கிறார். ஆனால், அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும் (செயற்பாட்டு பொறுப்பை ) ஆணுக்கு கொடுக்கிறார்.ஆதாம் பழத்தை சாப்பிட்டான் தேவன் ஏற்படுத்தின உடன்படிக்கையை மீறினான்.(ரோமர் 5: 12-17; பிரசங்கி 7:29). மனுஷன் பிசாசினுடைய சத்தத்தை கேட்டு பிசாசினுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தேவனை எதிர்க்க ஆரம்பித்து அவனால் இந்த முழு மனுக்குலமும் பாவத்திற்குள்ளாக விழுந்தது. ஆதாமுடைய வம்சத்தில் பிறந்த எல்லா மனிதனும் ஆதாமை போல் பாவத்தை சுதந்தரித்து கொண்டு வாழ்கிறார்கள். பாவத்தில் மனித நிலை மிகவும் கொடூரமானது.
- தேவனிடத்திலிருந்து பிரிவு
- தேவனுக்கு பகைஞராகி இருக்கிறோம்
- ஆதாமுடைய வம்சத்தில் பிறந்த நீங்களும் நானும் பிசாசின் பிள்ளைகளாக மாறினோம்
- பாவத்துக்கு அடிமைகளாக மாறினோம்
- மரணம் வந்தது
- தேவன் நித்தியமானவர் என்பதால் தேவனுடைய நித்திய கோபம் உரியவர்களானோம்
- நியாயபிரமாணத்தினுடைய சாபம் சுதந்தரித்தோம்
- பாவத்தை மட்டுமே விரும்புகிற நிலை
- படைத்தவரை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்; படைத்தவருடைய குணாதிசயத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்
- இச்சையின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
- அறியாமையை பெற்றுக்கொண்டோம் .
ஆதாமுடைய பாவத்தை சுதந்தரித்து கொண்டதனால் இந்த உலகத்தில் யாரும் நல்லவர்கள் இல்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா மனிதனுடைய இருதயத்தில் இருக்கும் எல்லா எண்ணமும் அவனுடைய சிந்தனைகளும் அதன் தோற்றமும் எல்லாம் தேவனுக்கு விரோதமாக மட்டும் தான் இருக்கும்.தேவன் இருதயத்தை கண்டிருக்கிறார் ஆதியாகமம் 6:5. எரேமியா 17:9ல் என்னுடைய அனுதின பாவ வாழ்க்கையில் என்னுடைய இருதயத்தில் உள்ள பாவத்தின் ஆழத்தை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அதை அறியத்தக்கவன் யார் என்று சொல்லும்போது என்னுடைய இருதயத்தினுடைய (செயல், எண்ணம்,வார்த்தை) ஆழத்தில் இருக்கிறந்த பாவத்தினுடைய அளவை கொள்ள முடியாது. ரோமர் 7:18 மனுஷனுடைய வாழ்க்கையில நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை என்னுடைய வாழ்க்கையில் பாவம் இருக்கறதுனால என்னுடைய வாழ்க்கையில் நன்மை செய்யலாம் என்று ஆசைப்பட்டாலும் நன்மை செய்ய முடியாது தீமையை மட்டும்தான் செய்து கொண்டிருக்க முடியும். இதுதான் பாவத்தின் ஆளுகை இதான் பாவத்தின் அடிமைத்தனம்.
தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு கிரியையை மனிதன் செய்யமுடியாததால் இனி ஒருபோதும் மனிதன் தன் சுயகிரியையின் மூலம் தேவனிடத்தில் சேரமுடியாது. அதனால், இரட்சிப்பு கிரியையினால் கிடையாது என்பதை நாம் மனிதனுடைய பாவ வீழ்ச்சியில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
ஆதாம் பழத்தை சாப்பிட்ட பின்பு தான் பாவம் செய்ததை உணர்ந்தான்; இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது ;அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தி இலையை வைத்து ஆடைகளை உண்டு பண்ணினார்கள் (ரோமர் 5: 12-17; பிரசங்கி 7:29) தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற ஒரு எண்ணத்துக்குள்ளாக போனார்கள். இன்றைக்கும் நம்முடைய இருதயத்தில் நான் என்னை காப்பாத்திக்குவேன் என்ற எண்ணம் இருக்கிறது. ஆதியாகமம் 3:8-9 இவ்வளவு மோசமான பாவத்தை பெற்று தன்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் தேவன் கொடுத்த அந்த கிரியையை செய்ய முடியாமல் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை கேட்டு தேவனை விட்டு ஓடிப்போய் ஒளிந்து கொண்டு நின்று கொண்டிருக்கிறான். இன்றைக்கும் நம்முடைய இருதயத்தில் தேவனுடைய கோபத்திலிருந்து எப்படியாவது தப்பித்து கொள்வேன் என்ற எண்ணம் இருக்கிறது.
இந்த நிலையிலிருந்து காப்பாற்ற தேவனே திட்டத்தை கொண்டிருந்தார். தேவன் செயல்படுகிறார் ;தேவன் இங்கே ஈடுபடுகிறார் என்று பார்க்கிறோம்; தேவனோ இரக்கத்தில் ஐஸ்வரியம் உள்ளவராய் தன்னுடைய மகா மேன்மையான கிருபையை வெளிப்படுத்துகிறார். அது தான் உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3:15
தேவனுடைய முதல் வாக்குத்தத்தம். ஆதியாகமம் 3:15 கிருபையின் வாக்குத்தத்தம்.
யார் முதல் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்?
பிதாவாகிய தேவன் சுவிசேஷத்தை தன்னுடைய நற்செய்தியை தன்னுடைய படைப்புகளுக்கு தேவன் அறிவிக்கிறார். தேவன் அறிவிக்காமல் இந்த சுவிசேஷம் மனுகுலத்திற்கு வராது. தேவன் வெளிப்படுத்தாமல் எந்தவிதமான நற்செய்தியும் தேவனிடத்திலிருந்து நமக்கு கிடையாது.
- உனக்கும் ஸ்திரீக்கும் – முதல் வார்த்தை. இது கிருபையின் வாக்குத்தத்தம் உனக்கும் ஸ்திரீக்கும் என்று பார்க்கும்போது அங்கே பிசாசுக்கும் ஸ்திரீக்கும் என்று சொல்லுகிறார் .
- பிசாசுக்கும் ஸ்திரீக்கும் பகையை உண்டாக்குவேன் முதல் முதலாக கொடுக்கப்படுகிற ஒரு வாக்குத்தத்தம் அது ஏவாளுக்கு கிருபையான மன்னிப்பை கொடுக்கிறது. ஏவாள் பாவம் செய்தால்; ஏவாள் வீழ்ந்து போனால்;ஏவாள் தான் பிசாசினுடைய பேச்சை கேட்டால் அங்க தேவன் கிருபையாய் ஏவாளை மன்னிக்கிறார் அங்க பிரித்தெடுக்கிறார் என்பதை பார்க்கிறோம் மன்னிப்பு கொடுக்கப்பட்டது.
பகை உண்டாக்குவேன் – பகை என்ற வார்த்தையை பார்க்கும்போது அந்த பயன்படுத்தப்பட்ட வார்த்தை நீடித்த காலமாய் தொடர்ச்சியாக இருக்கப்போகிற பகை. யோவான் 8: 44 நீங்களும் உங்கள் பிதாவாகிய பிசாசும் ; வெளிப்படுத்தல் 2:9 ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட அந்த சர்ப்பம் பிசாசானவன் என்று சொல்லப்படுகிறது. பகையை தேவன் ஏற்படுத்தி இருக்கிறார். சுவிசேஷத்தினுடைய சாராம்சம் இது கிருபையினுடைய வெளிப்பாடு மன்னிப்பு. சுவிசேஷம் வல்லமையாய் வாழ்க்கையில் செயல்படும்போது அது முதலாவது பாவத்திற்கு (தேவனை கனவீனப்படுத்தும் எந்த செயலுக்கும் ) எதிரான பகையை கொடுக்கும். தேவன் இன்றும் நம்முடைய வாழ்க்கையில் பாவத்தை வெறுக்க செய்கிறார்.பாவத்தை பகைக்காத எந்த மனுஷனும் பிசாசினுடைய அடிமைத்தனத்திற்கு கீழாக இருக்கிறான். ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டும் வரை ஆதாம் பாவத்தை நேசித்து கொண்டு கொண்டிருந்தான்.
பாவத்தை நேசிக்கும் மனுஷன் தேவனுக்கு விரோதமானவன் அவன் மேல் நித்தியமான கோபம் இருக்கும்
உலகில் இரண்டு விதமான மக்கள் இருக்க போகிறார்கள் பிசாசின் பிள்ளைகள் இன்னொன்னு ஸ்திரீயின் வித்து என்று பார்ப்போம். தேவன் தனக்கென்று ஜனங்களை தெரிந்து கொண்டு அவர்களை தேவன் ஆசீர்வதித்து அந்த சந்ததியில் தேவன் ஸ்திரீயின் வித்தை கொண்டு வருகிறார். பிசாசுக்கு எதிராக நிற்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள்
அவர் உன் தலையை நசுக்குவார்
அவர் என்று பார்க்கும்போது- அவர் ஸ்திரீயின் வித்து என்று பார்க்கிறோம்-அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆதாம் ஏவாள் பாவம் செய்தவுடனே தேவன் மீட்பை உண்டு பண்ணவில்லை ஆதாம் ஏவாள் பாவம் செய்வதற்கு முன்பாக தேவன் தன்னுடைய மீட்பின் திட்டத்தை (தேவனுடைய நித்திய ஆலோசனை) நிறைவு செய்திருக்கிறார். மீட்பின் திட்டத்தை முடித்து வைத்திருக்கிறார். வெளிப்படுத்தல் 13:8-வசனத்தில் பார்த்தீங்கன்னா உலக தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்று சொல்லப்படுகிறது.
கலாத்தியர் 4: 5 மற்றும் எபேசியர் 1:4 இணைத்து வாசிக்கும்போது தம்முடைய குமாரனை தேவன் பிதாவாகிய தேவன் அனுப்பினார். இரட்சிப்பதற்காக தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பவேண்டும் கிறிஸ்து அதற்காக பிறந்தார். நித்தியத்தில் திரித்துவ தேவனுடைய ஆலோசனையில் நிறைவேற்றப்பட்டு அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக; அந்த திட்டம் பாவியாகிய மனுஷனை ஸ்திரீயின் வித்தை அந்த வித்தில் இருக்கிற ஒவ்வொரு மனுஷனையும் காப்பாற்றுவதற்காக தேவன் தெரிந்து கொண்ட ஒவ்வொரு மனுஷனையும் பாவத்திலிருந்து விடுதலையாக்க வேண்டும் என்பதற்காக தேவன் செய்திருக்கிறார் அவர் தன்னுடைய குமாரனை அனுப்பி இருக்கிறார்.
கிறிஸ்துமஸ் என்பது ஏதோ ஒரு மனுஷன் வந்து வாழ்ந்து தன்னுடைய போதனையால் அநேக மனிதர்களை கவர்ந்து யூதர்கள் மத்தியில் ஒரு பெரிய புரட்சி செய்து அந்த புரட்சி பிடிக்காமல் யூதர்கள் அவருடைய சிலுவையில் அறைந்தார்கள் என்ற புனித மனிதனுடைய வாழ்க்கையை கொண்டாடுவது அல்ல; கிறிஸ்துமஸ் என்பது பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனை உலகத்திற்கு பாவத்தை மன்னிப்பதற்காக அனுப்பினார்.
எபிரேயர் 1ல் அவர் பிதாவினுடைய தற்சொரூபம் பிதாவினுடைய வெளிப்பாடு; மகிமையின் பிரகாசமும் அவருடைய தன்மையின் சொரூபமாய் இயேசு கிறிஸ்து பிதாவினுடைய பிதாவை பிரதிபலிக்கிறார். அவர்தான் பாவத்தை மன்னிக்கிறார், மன்னித்து உன்னதத்தில் உள்ள மகத்துவமானவருடைய வலது பாசலே உட்கார்ந்தார்; தேவதூதர்களை காட்டிலும் எவ்வளவு விசேஷத்த நாமத்தை பெற்றிருக்கிறார்(எபிரேயர் 1:4) . நீர் என்னுடைய குமாரன் இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன்(எபிரேயர் 1:5) . முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்க செய்தபோது தேவதூதர் யாவரும் அவரை தொழுது கொள்ளவார்கள்.
இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் இப்ப பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்ற சத்தியத்தின் அடிப்படையிலே இங்க இந்த பிதாவாகிய தேவன் சொல்லுகிறார் குமாரனை தொழுது கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார் இது இயேசு கிறிஸ்துவை தேவன் தெய்வீகமானவர் என்றும், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருக்கிறார் என்று பிதாவாகிய தேவனே சாட்சிக்கொடுக்கிறார் என்பதை கவனியுங்கள்.
உன் தலையை நசுக்குவார்
எப்படி பிசாசினுடைய தலையை நசுக்கினார்?
அவர் சிலுவையிலே பிசாசினுடைய தலையை நசுக்குகிறார். மரணத்துக்கு அதிகாரி பிசாசானவனை தனது மரணத்தினாலே அழிக்கும்படி … ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத் தனத்துக்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கு (எபிரேயர் 2:14-15). யோவான் 3:8 – பிசாசின் கிரியை அழிக்கவே அவர் வந்தார். தேவன் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து அந்த வெற்றி அது மன்னிப்பின் வெற்றி; உயிர்த்தெழுதல் மூலம் வெற்றி நிரூபிக்கப்பட்டு நிச்சயிக்கப்பட்டது. இந்த முழுமையான வெற்றி அவருடைய நியாயத் தீர்ப்பு கிடைக்க போகிறது. அவரே நமக்கு மிகப்பெரிய விசுவாசம் தேவனிடத்தில் சேரணும்னா பிசாசின் தலையை நசுக்கி இருக்க வேண்டும் ஒருவர் அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டும்தான் அவர் அதற்காக தான் இந்த உலகத்தில் வந்தார்.
நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்
விசுவாசிகளின் போராட்டத்தை குறிக்கிறது. ஆதியாகமம் 3:15 இந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிபவர்களுக்கு “ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் “ – இரட்சிக்கப்பட்ட மனுஷனுடைய தொடர்ச்சியான ஆவிக்குரிய போராட்டத்தை குறித்து பேசுகிறது. ஒருபோதும் பிசாசானவனால் தேவனுடைய பிள்ளையை ஒருபோதும் நரகத்துக்கு நேராக இழுத்து கொண்டு போக முடியாது. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு பாவ போராட்டம் இருக்கிறது ஆவிக்குரிய போராட்டம் இருக்கிறது எபேசியர் 10:18 தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துகொள்ளுங்கள்; தேவனை சார்ந்திருங்கள் என்று சொல்லுகிறார். 1 பேதுரு 5:8-9 அவன் கெட்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாம் என்று வகை தேடிகொண்டிருக்கிறான். அதனால்தான் இயேசு மத்தேயு நான் என் சபையை கட்டுவேன் என்று சொல்லி பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. ஆதாம் முதல் ஏவாலிருந்து நோவாவிலிருந்து ஆபிரகாம் ஈசாக்கு, யாக்கோபு, மோசே, இஸ்ரவேல் புத்திரர்கள் யோசுவா, காலேப் போன்ற தாவீது, சாலமோன் போன்ற எல்லாரும் இந்த சுவிசேஷத்தை விசுவாசித்துதான் வாழ்ந்தார்கள். (ரோமர் 1 – தேவனுடைய சுவிசேஷம் ; எபிரேயர் 11 – விசுவாச பட்டியலில் இந்த சுவிசேஷத்தை கேட்டார்கள். சுவிசேஷத்தை பிதாவாகிய தேவன் ஆரம்பத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேவன் அங்க இருக்கிற மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதம் ஒரு பெரிய கிருபை என்னன்னு பார்த்தீங்கன்னா ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மன்னிப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் (ஆதியாகமம் 3:21) , (கலாத்தியர் 4:5- நம்மை பிள்ளைகள் ஆகும்படி )
பிசாசின் பிள்ளைகளுக்கு நித்தியமான அழிவு உண்டு; அது அக்கினியின் கடல் ;அது நித்திய நித்தியமான அக்கினியின் கடல்; அங்க அழிவே இல்லை ; எல்லா பாவமும் ஞாபகப்படுத்தப்படும் தேவனுடைய நித்திய கோபம் உங்கள் மீது ஊற்றப்பட்டு கொண்டே இருக்கும் பாவம்; அந்த நித்திய தேவனுக்கு விரோதமானது ; ஆகவே தேவனுடைய கோபம் ,தேவனுடைய தண்டனை நித்திய நித்தியமாக தான் இருக்கும்
மனந்திரும்பி இயேசுவை விசுவாசியுங்கள் !



