Blog

26 Aug
0

தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான எதிர்காலம்

சங்கீதம் 1:5
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

அ. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்:

துன்மார்க்கன் பதரைப்போல் “எடை”யற்றிருப்பதால், நியாயத்தீர்ப்பில் வெறுங்கையாய் இருப்பார்கள். தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரைக் குறித்து சொன்னது போலவே “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப்பட்டாய்” துன்மார்க்கனுடைய நிலை இருக்கும் (தானியேல் 5:27).

 

ஆ. பாவிகள் நீதிமான்களின் சபையிலும்:

இதுவே பாவியின் எதிர்காலம். நீதிமான அடிகிற அதே மகிமையான எதிர்காலத்தில் பாவிகள் பங்கடைவதில்லை. நிகழ்காலத்திலுந்தான். அவர்கள் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கும் பட்ச்சத்தில் நீதிமான்களின் சபையில் பங்கடைய முடியாது.

சங்கீதக்காரம் சொன்னான், என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். (சங் 86:2)

Read More
26 Aug
0

தெய்வபக்தியற்ற மனிதனின் வழி

சங்கீதம் 1:4
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

தெய்வபக்தியற்ற மனிதனின் ஆபத்தான நிலை

அ.  துன்மார்க்கரோ அப்படியிராமல்:

நீதிமானைக் குறித்த ஒவ்வொரு உண்மைகளும் – இலையுதிராதிருக்கிற மரம், தொடர்ச்சியான ஜீவனும் போஷிப்பும், கனிதரும் வாழ்க்கை, செழிப்பு – இவையெல்லாம் துன்மார்க்கனைக் குறித்ததல்ல. ஒருவேலை சில சமயங்களில் மேற்கூறிய இவையெல்லாம் துன்மார்க்கனுடைய வாழ்க்கையிலும் நிறைவாக இருப்பதுபோல் கூட தோன்றும். ஆனால் அப்படி இருப்பதில்லை. இவைகளில் சில சில மணித்தியாலங்கள் துன்மார்க்கனுடைய வாழ்க்கையில் இருக்கும். இருந்தும் அவை உண்மையில் அவனுடைய வாழ்க்கையில் இல்லை என்பதே நிஜம். 

ஆ. காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்ப்போல் இருக்கிறார்கள்:

பதர் என்பது தானியத்தில் மேல் ஒட்டியிருக்கும் சிறிய தொலி. அந்த தானியம் மாவாக மாற்றப்பட வேண்டுமானால் அந்த உமிகள் விலக்கப்படவேண்டும். அப்படி தானியத்திலிருந்து உமியைப் பிரித்தெடுக்க தானியத்தைக் கொத்தாக காற்றில் வீசினால் போதும்; உமிகளுக்கு சொல்லக்கூடிய அளவு எடை இல்லாமையால் அவை பிரிந்து பறந்துபோய்விடும். இப்படித்தான் துன்மார்க்கனுடைய வாழ்க்கை நிலையற்றதாக இருக்கும்.

ஸ்பர்ஜன் ஓரிடத்தில் சொன்னார், பதர் என்பது “உள்ளார்ந்த முறையில் பயனற்றதாகவும், செத்ததாகவும், உதவாததாகவும், எளிதாக சிதறி ஓடுகிறதாகவம்” இருக்கும் என்று. ஒரு மரத்திற்கும் பதருக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு.

Read More
16 Aug
0

மன்னிப்பு

ஏசாயா 43:25   “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” 
நான், நானே” – என்ற ஒன்றுக்கும் மேல் கூறுதல் அந்த வார்த்தையின் சொல்லழுத்தத்தையும் வீரியத்தையும் காட்டுகிறது.
குலைத்துப்போடுகிறேன்” – பாவம் கறைபடுத்துகிறது. தேவன் சுத்தமாக பாவத்தின் கறைகளை அகற்றி குலைத்துப்போடுகிறார்.
என் நிமித்தமாகவே“- தேவன் உன்னை மன்னிப்பதற்கான காரணம் உன்னிடம் இல்லை. தேவன் தம்முடைய காரணத்திற்காகவும், தம்முடைய மகிமைக்காகவும் உன்னை மன்னிக்கிறார்.
நினையாமலும் இருப்பேன்“- மன்னிப்பு என்பது உன்னுடைய பாவங்களை எல்லாம் தேவன் மறந்துவிடுவதற்கான வாக்குத்தத்தம் அல்ல. மன்னிப்பு என்பது அடக்கம்பண்ணுதலோடு தொடர்புடையது. மன்னிப்பு என்பது பாவத்தால் செத்து அழுகிக்கொண்டிருக்கும் உன்னுடைய சரீரத்தை புதைத்து அதன் கிரியையை என்றும் உனக்கெதிராக கொண்டுவரமாட்டார் என்ற வாக்குறுதி. 
இதை நான் இப்படி சொல்ல விரும்புகிறேன்: 
மன்னிப்பு என்றால் தேவன் சட்டரீதியாக உனக்கு பதிலாக மரித்து உன்னுடைய எல்லா பாவங்களையும் அழுக்கற்ற நிலையில் கழுவி சுத்திகரிக்கிறார் (கொலோ 2:13-14). மேலும் அந்த பாவங்களை என்றும் உனக்கு எதிராக கொண்டுவரமாட்டேன் என்ற வாக்குத்தத்தையும் கொடுக்கிறார். சங்கீதம் 32:1 சொல்லுகிறது, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.” சாத்தான் உன்னுடைய பாவத்தின் மயானத்திற்குச் சென்று, உன்னுடைய மன்னிக்கப்பட்ட பாவங்களையும் உன் நினைவிற்கு கொண்டுவந்து உன்னை குட்ற்றப்படுத்துவான், நிந்திப்பான், தேவனிடம் உள்ள சமாதானத்தை  இடையூறு செய்வான்.
அன்பான கிறிஸ்தவனே, சாத்தான் உன்னை தாக்கும்போது, நீ ஜெபத்தில் தேவனிடம் சென்று உன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்த அவருடைய தயவு பெருத்த அன்பிற்காக துதிகளை செலுத்து. மனிதன் சிலநேரங்களில் “ஆம், தேவன் என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால், என்னால் என் பாவங்களை மன்னிக்க முடியவில்லை” என்று சொல்லுகிறான். உன்னை நீயே மன்னித்துக்கொள்ள வேண்டும் என்று வேதம் எந்த இடத்திலும் உன்னை அழைக்கவில்லை. உன்னால் உன்னை மன்னிக்க முடியாது என்று சொல்லுவது வேதத்திற்கு எதிரானதும், திமிர்பிடித்த பேச்சும், முட்டாள்தனமானதும் ஆகும்.
உங்கள் மன்னிக்கப்பட்ட பாவங்களை நினைவில் கொள்ளுக்கிறீர்கள் என்றால், நீங்கள் கல்லரையில் தேவன் புதைத்த அழுகிய துர்நாற்றம் பிடித்தவைகளை தோண்டி எடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி செய்யலாகாது. அவை நிச்சயமாக மறந்துபோகப்பட வேண்டும். அதே நேரத்தில், உங்கள் மன்னிக்கப்பட்ட பாவங்களை தேவன் தமது நினைவில் கொண்டுவருவதில்லை என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
மற்றொரு பக்கம், உங்கள் பாவங்கள் சில நேரங்களில் நினைவில் இருப்பது தேவனுடைய கிருபையாக இருக்கும். பின்னர் வரும் பாவங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் எச்கரிக்கையாக தேவன் அப்படி அனுமதிக்கிறார்.
உன்னுடைய எதிர்கால நம்பிக்கை இதுதான் – ஒரு நாள் வரும், அன்று தேவன் உன்னுடைய மனதின் நினைவில் இருக்கும் பாவங்கள் அனைத்தையும் நீக்கிப்போடுவார். உன்னுடைய பாவத்தின் நினைவுகள் பரலோகத்திற்கு உன்னுடன் சேர்ந்து வருவதில்லை. பின்பு, நீ உண்மையில் சொல்லலாம், “விடுதலை, விடுதலை, கடைசியாக இனி என்றென்றும் விடுதலை பெற்றேன்” என்று.
அன்பான நன்பனே, உன்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் மன்னிப்பை கிறிஸ்துவில் அடையமுடியும் என்பது உனக்கு தெரியுமா? கிறிஸ்துவையும் அவருடைய மரணத்தையும் தவிற வேறு எந்த வழியிலும் மன்னிப்பு என்பது சாத்தியமில்லை. நீ இவைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம்,
(1) உன்னுடைய பாவங்களுக்கான அபராதத்தை செழுத்தித் தீர்த்து பரிகரித்த கிறிஸ்துவின் மரணம்.
(2) உன்னுடைய பாவங்களுக்காக நித்தியம் நித்தியமாக நரகத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 
உன் விருப்பத்தின்படியெல்லாம் பாவ மன்னிப்பை பெற்றுவிடமுடியாது. நீ உன் பாவங்களிலிருந்து தெய்வீக மன்னிப்பை அடைய ஒரே வழிதான் உண்டு. அது கிறிஸ்துவின்மூலம் மட்டுமே. பாவத்திற்கெதிரான தேவனின் நித்திய கோபத்திலிருட்நு தப்பித்து மறைந்துகொள்ள பாதுகாப்பான பேழையாக கிறிஸ்து மட்டுமே இருக்கிறார். இப்போதே மனந்திரும்புதலோடு, உன் பாவங்கள் மன்னிக்கப்படும்படியும், நீ இரட்சிக்கப்படும்படியும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரை நோக்கி ஜெபம் செய் (ரோமர் 10:13).

Read More
08 Aug
0

பாவம் ஏன் கொடூரமானது?

 

ரோமர் 3 : 21- 26

முன்னுரை:

இன்றைக்கு இந்த உலகத்தில் நமக்கு தேவனைப் பற்றிய செய்தி அவசியமாக இருக்கிறது தேவனைப் பற்றிய செய்தி தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ளவும் மனிதர்களாகிய நாம் யார்? நம்முடைய நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவும் அவசியமாக இருக்கிறது.

வேதம் கூறுகிறது ரோமர் 3:23ல் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி”. இந்த தீர்ப்பு நம் எல்லார் மேலும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பில் இருந்து நாம் நம்முடைய பாரம்பரியத்தினாலும், நற்செயல்களினாலும் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. ஏன் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் நாம் எல்லாரும் பாவஞ்செய்து தேவனுடைய விரோதிகளாக இருக்கிறோம். பாவம் என்பது தேவனுடைய கட்டளைகளை மீறுவது 1யோவான் 3:4 “பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.”. பாவம் கொடூரமானது. ஆனால் இன்றைக்கு நம்மால் இந்த பாவத்தை அவ்வளவு கொடூரமானதாக பார்க்க முடிவதில்லை. இன்றைக்கு இந்த உலகத்தில் பாவத்தை பண்ணுகிறோம், பாவத்தை சகித்துக்கொள்ளுகிறோம், பாவத்தை ஏற்றுக்கொள்ளுகிறோம் பாவத்தோடு இணைந்து வாழ்கிறோம். பொய் சொல்லுவது பாவமா? அவ்வளவு பெரிய பாவம் இல்ல, கெட்ட வார்த்தை பேசுவது பாவமா?, இச்சை, ஆபாச மொழிகள், கீழ்ப்படியாமை ஆகிய இவைகள் பாவமா?. இவையெல்லாம் யார் செய்யாமல் இருகிறாங்க சொல்லுங்கள்? இவையெல்லாம் செய்தால் தான் மனிதன் என்று பாவத்தை எற்றுக்கொள்ளுகிறோம் இணைந்து வாழ்கிறோம்.

வேதம் கூறுகிறது இவையெல்லாம் தேவனுக்கு விரோதமானது.

தேவனுக்கு விரோதமானது என்பது அது கொடூரமானது, பாவம் கொடூரமானது என்பதை தெரியாததினால்தான் அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். சங்கீதம் 51:4 “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். தாவீது பாவம்செய்து என்ன சொல்லுகிறான் சங்கீதம் 51:4 தேவனுக்கு விரோதமாய் பாவம்செய்தேன். தாவீது செய்த பாவங்கள் விபச்சாரம், இச்சை, கொலை, இவைகள் மனிதனை பாதித்தாலும் முதலாவது நேரடியாக தேவனை பாதிக்கிறது.

பாவம் கொடூரமானது என்பது எப்போ புரியும் என்றால் நான் யாருக்கு விரோதமாய் பாவம் செய்கிறேன் என்பதை அறியும்போது தான் புரியும். தேவனின் மேன்மையான குணாதிசயங்களுக்கு எதிராக பாவம்செய்கிறேன் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.

தேவனைப்பற்றிய தெளிவான அறிவு இல்லை என்றால் பாவத்தைப்பற்றிய அறிவும் குறைவாகவே காணப்படும். தேவனைப்பற்றிய அறிவு தெளிவாக இருக்கிறபோது தான் பாவத்தைப் பற்றின கொடூரத்தன்மையும் தெளிவாக புரியும்.

தேவனைப்பற்றிய சரியான பார்வையும் அறிவும் மிக அவசியமானது. தேவனைப்பற்றிய அறிவு தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிகிறதிலிருந்து துவங்குகிறது. தேவனுடைய சில முக்கியமான குணாதிசயங்கள் மனிதனுடைய பாவம் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது.

  1. தேவன் சர்வ அதிகாரி (சர்வ ஏகாதிபத்தியம்)

தேவன் சர்வத்தையும் தன்னுடைய அதிகாரத்திற்குள்ளாக வைத்திருக்கிறார். அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கிற அனைத்தும் நாம் பார்க்கிற பார்க்காத காரியங்களும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள்ளாக இருக்கிறது

சங்கீதம் 103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

சங்கீதம் 115:3 “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்

சங்கீதம் 135:6 “வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.”

யோபு 23:13 “அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.”

எபேசியர் 1:12 “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே”

தானியேல் 4:35 “பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

சங்கீதம் 139:1,2-4, 7-10, 12, 13, 16 வாசிக்கவும்.

தேவன் நாம் செய்கிற ஒவ்வொரு பாவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு பாவமும் என்ன சொல்லுகிறது என்றால் எவ்வளவு பெரிய தேவனுக்கு நான் எதிரானவன்.

தேவன் சர்வ அதிகாரி என்பது என்ன கூறுகிறது என்றால் என்னுடைய எல்லா பாவமும் நான் தேவனுக்கு எதிரனாவன், பாவம் செய்கிற ஒவ்வொரு மனிதனும் சுய அழிவுக்கு நேராக சென்றுக்கொண்டு இருக்கிறான்.  யாத்திராகமம் 20:20 “மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.” தேவன் எதற்கு தன்னை வெளிப்படுத்தினார்? தம்மை பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காக, மிகப்பெரிய தேவனுக்கு முன்பாக நாம் செய்கிற பாவம் வந்து நிற்கிறது.

           2. தேவன் பரிசுத்தமுள்ளவர்:

தேவன் பரிசுத்தமுள்ளவர் என்று வேதம் தெளிவாய் அநேக பகுதிகளில் கூறுகின்றது

ஏசாயா 6:3 “ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்

வெளிப்படுத்தின விசேஷம் 4:8 “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

இந்த இரண்டு வசனங்களில் பரிசுத்தர் என்ற வார்த்தை மூன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்று முறை கூறுவது மிக உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது. தேவனின் பரிசுத்தத்தை தான் வேதம் மிக உயர்வாய் பேசுகிறது. அவருடைய பரிசுத்தத்தை சார்ந்து தான் மற்ற எல்லா குணாதிசயமும் அடங்கும்.

மத்தேயு 6:9 “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” தேவனுடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

ஆபகூக் 1:13 “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?”

1யோவான் 1:5 “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;

யாத்திராகமம் 15:11 “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

1சாமுவேல் 2::2 “கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை

புரிந்துக்கொள்ள முடியாத பரிசுத்தமுடைய தேவன் எல்லாப் பாவமும் அவருக்கு அருவருப்பானது பாவம் என்பது தேவனுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தூண்டக்கூடியது. உதாரணமாக ஆதாம் – ஏவாளின் பாவத்தில் தேவன் அவர்களை பொறுத்து போகவில்லை. தான் நேரடியாக படைத்த படைப்பு தானே என்று இரக்கப்படவில்லை. அதேபோல 2சாமுவேல் 6:3-7ல் ஆசாரியர்கள் தவிர வேறே யாரும் தொடக்கூடாத தேவனுடைய பெட்டியை தொட்டான், தொட்ட சமயத்திலே செத்தான். ஊசாவின் நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தாலும் தேவனுடைய பரிசுத்தத்ததை திருப்பதி செய்யவில்லை. நீங்களும் நானும் இவ்வளவு மகிமையான பரிசுத்த தேவனுக்கு முன்பாக பாவம் செய்துக்கொண்டிருக்கிறோம் என்ற அறிவு நான் செய்யும் பாவம் எவ்வளவு மோசமானது என்பதை காண்பிக்கும்.

  1. நீதியுள்ள தேவன்:

தேவன் எப்பொழுதுமே நீதியுள்ளவர்.  யோசுவா 7 ஆகானின் பாவம் நிச்சயமான தண்டனையை பெற்றுத்தந்தது

சங்கீதம் 7:9 “துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்

சங்கீதம் 119: 142 “உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.”

உபாகமம் 33:4 “பட்சபாதம் இல்லாத தேவன் நீதியுள்ள தேவன் எல்லா தீமையையும் வெறுக்கிறார் நீதியுள்ள தேவன் தண்டிக்கிறார்.

யோசுவா 7ம் அதிகாரத்தில் தேவன் எவ்வளவு நீதியாய் ஆகானை அவனுடைய பாவத்தின் நிமித்தம் தண்டிக்கிறார் என்பதை நாம் யோசுவா  7:1,11,12,19,20,25 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம்.  இப்படி நீதியுள்ள தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்கிறோம் இப்படியே போன நகரம் தான் ரோமர் 3:10 கூறுகிறது நீதிமான் ஒருவனுமில்லை. இப்படிப்பட்ட நிலையில் தேவனுடைய கோபத்திலிருந்து நான் எப்படி தப்பித்துக்கொள்ள முடியும்.

வேதம் மிக தெளிவாக தேவன் அன்புள்ளவர் என்பதையும் போதிக்கிறது. 1யோவான் 4:8 – தேவன் அன்பாகவே இருக்கிறார், 2 யோவான் 3:14  – தேவனுடைய அன்பு. தேவனுடைய அன்பை நாம் சவுலின் வாழ்வில் காணலாம்.

சவுல் யார் – சபைகளை துன்பப்படுத்தினவர் தேவனை சபித்தவர். தேவ கோபத்திற்கு மட்டுமே தகுதியையுடையவன். இப்படிப்பட்ட மனிதனை தேவன் அன்புகூர்ந்து
தேவன் தன்னை வெளிப்படுத்தினார், பாவத்தை உணர்த்தினார், மன்னிப்பைக் கொடுக்கிறார், தன்னைப்போல் மாற்றுகிறவர். இன்றைக்கும் அன்புள்ள தேவன். ஆகவே அவர் சிலுவையில் மரித்தார்  ரோமர் 3:24  “இலவசமாய் கிருபையினால் கிறிஸ்து இயேசுவினால் மீட்டு நீதிமானாக்கினார்.

இன்றும் தேவனுடைய அன்பு பெரியதாயிருக்கிறது, மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். தேவன் மகா பெரியவர் அவருக்கு முன்பாக பாவம் அருவருக்கத்தக்கது, நிச்சயமாய் தண்டனை உண்டு. பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

Read More