கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி-13

நம் ஆதிப்பெற்றோர் தாங்கள் படைக்கப்பட்ட நிலையிலேயே நிலைத்திருந்தார்களா?

பதில்:

நம் ஆதிப்பெற்றோர் தடைசெய்யப்பெற்ற பழத்தைப் புசித்து, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தங்களின் சுயாதீன சித்தத்தின்படி செயல்பட்டு, படைக்கப்பட்ட நிலையிலிருந்து வீழ்ந்து போனார்கள். 

வேத ஆதாரம்:

ஆதியாகமம் 3:6-8

    1. 6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
    1. 7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
      1. 8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய

    கர்த்தருடைய

      1. சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய

    கர்த்தருடைய

       சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

பிரசங்கி 7:29

    இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.