Blog

05 Dec
0

Spurgeon’s Catechism கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி பதில் முறையில் வேத சத்தியங்கள்

கேள்வி- 10

தேவன் மனிதனை எவ்வாறு உருவாக்கினார்?

பதில்

தேவன் மனிதனை ஆணும் பெண்ணும் ஆக உருவாக்கினார். ஞானம், நீதி, பரிசுத்தம் என்னும் தனது சாயலோடும், மற்ற படைப்புகளை ஆளும் அதிகாரம் கொண்டவனாகவும் படைத்தார்.

வேத ஆதாரம்

ஆதியாகமம் 1:27 

    1. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

கொலோசெயர் 3: 10

    1. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

ஆதியாகமம் 1:28

    1. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,                                             சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல                                               ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
  •  

     

    Read More
    05 Dec
    0

    வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2

    வேத வியாக்கினப் பிரசங்கம் – பாகம் -2

    சரியான வேத வியாக்கியானத்தின் மூலமாக மட்டுமே வேத வசனங்கள் அதிகாரத்தோடு, வல்லமையோடு பிரசங்கிக்க முடியும். சரியான விளக்கம் இல்லாத இடத்தில் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் வெளிப்பாடாது. கிரமமான வேத வியாக்கியானம் இல்லாத இடத்தில் ஒருபோதும் கிறிஸ்து உயர்த்தப்பட முடியாது.  சரியான, ஆழமான வேத விளக்கம் கட்டாயம் கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்கிறதாக
    இருக்கும். அப்படி இல்லையென்றால் அந்த பகுதியை நாம் தவறாக புரிந்து
    கொண்டிருக்கிறோம் என்றுதான்  அர்த்தமாகும். வேதத்தின் அனைத்து
    பகுதிகளிலும் மறைந்திருக்கும் கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்க
    வேண்டுமானால் சரியான ஆழமான வேத வியாக்கியானத்தை தவிர வேறு எந்தவழியுமில்லை. 

    கிறிஸ்துவை மையபடுத்தி பிரசங்கிப்பது என்பது கிறிஸ்துவை வெறுமையாக அறிவிப்பது மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கிறிஸ்துவை மிக உன்னதமாக உயர்த்தி பிரசங்கிப்பதாகும். ஒவ்வொருமுறையும் நமது பிரசங்கத்தை நாம் பரிசோதித்து பார்க்க வேண்டும். மேலோட்டமாக பாவத்தை சொல்வதும், சத்துவமற்று தேவனின் குணாதிசயத்தையும், அவரின் நீதியான தணடனையை பற்றி பேசுவதும், வெறுமனே இப்படி இருக்க கூடாது, இதை தான் செய்ய வேண்டும் என்று  சொல்லி இறுதியில் கிறிஸ்துவை சிறிது சொல்வதல்ல பிரசங்கம், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லாவற்றை காட்டிலும் பெரியவர், மாபெரும் உன்னதமான தேவன் என்று உயர்த்தி காண்பிக்க வேண்டும். 

    Christ-Centered Preaching – என்றால் என்ன? கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், பாடுகள், மரணம், உயிர்தெழுதல் போன்ற எல்லாவற்றையும் தெரிவிப்பது மட்டும் அல்ல. தேவன் ஒவ்வொரு வேத பகுதியிலும் கிறிஸ்துவை பற்றிய சத்தியங்களை எப்படி மகிமையாய் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை அறிந்து அவற்றை முக்கியபடுத்தி பிரசங்கிப்பது ஆகும். கிறிஸ்துவை விட்டு மற்ற சத்தியங்களை பிரதானப்படுத்தி பேசுவதோ அல்லது மக்களை நல்லவர்களாக, ஒழுக்கம் சார்ந்தவர்களாக மாற்றுவதல்ல நமது நோக்கம் அவர்களை கிறிஸ்துவைப்போல மாற்றுவதே ஒரு வேதபூர்வமான பிரசங்கத்தின் நோக்கம்.

    வேதத்தின் (வியாக்கியானத்தின்) மூலமாக தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக
    பாவிகளான நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று ஆராய்ந்து,
    கிறிஸ்துவை உயர்த்தி பிரசங்கிப்பதுதான் வியாக்கியானத்தின் அடிப்படை சாராம்சம்.

    கிறிஸ்து மையமான பிரசங்கங்கள் மேன்மையாக காணப்படாமல் இருப்பதற்கான தடைகற்கள். 

    1 தெசலோனிக்கேயர்  1:5
    எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம்   எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 

    பவுல் மெய்யான, வெற்றியுள்ள ஊழியதிற்கான 2 அடிப்படை காரியங்களை கூறுகிறார்.

    எங்கள் சுவிசேஷம்- என்று கூறும்போது நங்கள் பெற்று அனுபவிக்கிற
    சுவிசேஷம். தான் அனுபவிக்காத காரியங்களை பேசுகிறவன் மாய்மாலன். பரிசேயர்கள் தங்களது பிரசங்கத்தில் செய்ததும் இதுதான். உன் ஆத்துமாவில் ஆழமாக பதியப்பட்டு எழுதபடாத எந்தவொரு சத்தியமும் உன் வாயிலிருந்துவரக்கூடாது –ஸ்பர்ஜன்.  ஆசாரிப்புக் கூடாரத்தில் ப.ஏ. ஆசாரியன் மக்களுக்கு தேவனின் மன்னிப்பை வழங்குவதற்கு முன்பு அவன் பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை தனது கைவிரல், கால்விரல், காதுகளில் தெளித்துவிட்டு பிறகு தான் மக்களிடம் வந்து உடன்படிக்கையின் இரத்தத்தை தெளிப்பான். அதேபோல் ஒரு பிரசங்கி வேதவார்தையினால்  தன்னை சுத்திகரித்துக் கொள்ளாமல் மற்றவர்களை ஒருபோதும் சுத்தபடுத்த முடியாது.

    உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று-  என்று பவுல்
    கூறும்போது நாங்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்று நீங்கள் நன்றாய்
    அறிந்திருக்கிறீர்கள் என்கிறார். 

    2. போலியான ஜெப வாழ்வு – ஒரு பிரசங்கியின் வாழ்வில் வேத வாசிப்புக்கு இணையான ஜெப வாழ்க்கை இருக்கணும். ஜெபங்கள் தொடர்ச்சியாக சீர்படுத்தப்பட வேண்டும். ஜெப வாழ்வில் வளர்ச்சி இருக்க வேண்டும். பிரசங்க நாட்களில் அல்லது பிரச்சனை உள்ள நாட்களில் மட்டும் கரிசனையா தேவனிடம் ஜெபிக்ககூடாது. எல்லா நிலைகளிளும் அவன் வாழ்வில் ஜெபம் பிரதானமாக இருக்க வேண்டும். ஒரு போதகனின் வாழ்வில் தன்னை தாழ்மைபடுத்தக்கூடிய மற்றும் அவனுக்குள் தாழ்மையை உருவாக்ககூடிய இடம் ஜெபத்தை தவிர வேறெங்குமில்லை.

    3. பாவத்தோடு தொடர்ந்து வாழ்வது– ஒரு பிரசங்கி பாவத்தை நேசித்து
    கொண்டும், தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்து கொண்டும் ஒருபோதும் கிறிஸ்துவை உயர்த்தி வாழ முடியாது. ஒரு போதகன்  கிறிஸ்துவோடு சரியான உறவில் இருக்கும்போதுதான் அது அவனது மற்ற எல்லா காரியங்களிலும் சரியாக உறவை வலுப்படுத்தும். தனிப்பட்ட, அந்தரங்க வாழ்வில் பாவத்தோடு வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவை ஒருவனாலும் உயர்த்த முடியாது. கிறிஸ்துவோடு பெலமுள்ள உறவு இருந்தால் மட்டுமே பிரசங்கமும் ஆவிக்குரிய பெலமுள்ளதாய் இருக்கும். 

    உன்னை குறித்தும் உன் போதகத்தை குறித்தும் எச்சரிக்கையாய் இரு. என்று பவுல் எச்சரிக்கிறார். 
    தேவன் தனது ராஜ்யத்தின் பணிக்கு தான் பரிசுத்தபடுத்துகிற பாத்திரங்களையே  பயன்படுத்துகிறார்.

    கணக்கு வாத்தியார் தான் சரியாக வரி கட்டாத நிலையிலும் அதைபற்றி தெளிவாக போதிக்க முடியும், ஒரு அரசியல்வாதி அதிகமாக ஊழல் செய்துகொண்டும் நேர்மையை குறித்து மிக சிறப்பாக பேச முடியும். ஆனால் ஒரு பிரசங்கி தன் வாழ்வில் தேவன் வெறுக்கிற காரியங்களை செய்துகொண்டு, அந்தரங்க வாழ்க்கையில் பாவத்தை நேசித்துக்கொண்டு ஒருபோதும் ஜீவன் தருகிற பிரசங்கத்தை செய்ய முடியாது.  ஒரு பிரசங்கியினுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஒன்னு அவனுடைய பிரசங்க ஊழியத்தை கட்டும் இல்லையென்றால் அவனது ஊழியத்தை அழிக்கும். சுத்தமான தண்ணீர் உள்ள கிணற்றில் தான் மக்கள் அதிகம் சென்று நீரை பருகுவார்கள், அசுத்தமான தண்ணீரை யாரும் பருக விரும்ப மாட்டார்கள். பிரசங்கம் என்பது எதோ ஒரு மணி
    நேரம் போராட்டக்களம் அல்ல, அது பல மணி நேர போராட்ட வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.

    4. வேத ஞானம் இல்லாததுவேதத்தை அதிகமாக ஆராயாத, தியானிக்காத வேதத்தோடுஅதிகமாக  நேரத்தை செலவிடாத எந்த பிரசங்கியும் கிறிஸ்துவை உயர்த்தி பிரசங்கம் பண்ண முடியாது. ஒரு பிரசங்கியினுடைய ஊழிய அனுபவம் மற்றும் அவனுடைய தனிப்பட்ட அனுபவம் கிறிஸ்துவிற்கு எந்த மகிமையையும் கொண்டு
    வராது. வேதத்தின் மூலமாக மட்டுமே கிறிஸ்து தமது மகிமையை சரீரமாகிய சபையில் வெளிப்படுத்துகிறார். வேதத்தில் வளராதவன் கிறிஸ்துவில் ஒருபோதும் வளர முடியாது.

    5. மனித வழிகளை சார்ந்திருப்பது ஒரு பிரசங்கி தனது பிரசங்கத்திற்கு பிரதானாமாக வேதாகம விளக்கவுரைகள், வேதாகம கட்டுரைகள், மற்ற போதகர்களின் பிரசங்கங்கள், அவர்களின் வழிமுறை ஆகியவற்றை சார்ந்து தனது பிரசங்கத்தில் பயன்படுத்துவது ஒருபோதும் கிறிஸ்துவை மகிமைபடுத்துகிறதாய் இருக்காது. நமது ஆவிக்குரிய சிறப்புரிமைகள் நம்மை கிறிஸ்துவை மையபடுத்தும் பிரசங்கியாக மாற்ற முடியாது. எந்த மனித வழிமுறைகளும், மனித ஞானமும் பிரசங்கத்தில் கிறிஸ்துவிற்கு மகிமையை சேர்க்காது.  எதில் நமது நம்பிக்கை
    உள்ளது? வேதத்திலா அல்லது வேதம் சார்ந்த புத்தகங்களிலா? என்பதை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமது நேரமும் காலமும் எதில் அதிகமாக செலவிடபடுகிறது? சில பிரசங்கிமார்கள் தாங்கள் ஆங்கில அறிவும் மற்றும் வேத மூல மொழிகளில் சிறந்த புலமையும் பெற்றிருந்தால் தங்களது பிரசங்கம் வல்லமையாய் இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. அவைகள் வேதத்தை சரியாக விளங்கிக்கொள்ள அவசியாமாக காணப்பட்டாலும் நமது பிரசங்கத்தை ஒருபோதும்
    அவைகள் மேம்படுத்தாது. தேவனின் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் பெலமும், அதிகாரம் நிறைந்த வேத வார்த்தைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்துவின் சிலுவைக்கு அருகே பாவியான மனிதனை உருக்குலைத்து மண்டியிட செய்யாதவரை
    கிறிஸ்துவின் உன்னதமான மீட்பு ஒருபோதும் எந்த பிரசங்கியாலும் மகிமையாக பிரசங்கிக்க முடியாது. 

    Read More
    30 Nov
    0

    நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்

    நமக்காக பாலன் பிறந்தார்; குமாரன் கொடுக்கப்பட்டார்


    போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல்

     

    கிறிஸ்மஸ் என்றவுடன் இன்று பெரும்பாலானோரின் மனதில் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக், நட்சத்திரம்,  பாடல்கள்,  அலங்காரங்கள்  என்ற சிந்தனைதான் ஆழமாகப்  பதிந்துவிட்டது. இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை தவறவிடுவதே ஆகும்.  எனவே, மேற்சொல்லப்பட்ட தலைப்போடு கிறிஸ்து பிறப்பை  சிந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.

    முதலில், கிறிஸ்து  தொடர்பான   சில யதார்த்தங்களை கவனிப்பது நல்லது. கி.மு மற்றும் கி.பி அதாவது, கிறிஸ்துவுக்கு முன் – கிறிஸ்துவுக்கு பின் என்று மனிதசரித்திரம் இருபெரும் கூறாக பிரிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, கிறிஸ்து என்பவர் சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை மனுக்குலம் ஏற்றுக்கொண்டிருப்பது கண்கூடு. அவர் சரித்திர மனிதர் என்ற அடிப்படையிலேயே, மகாபுருஷர் என்றும்,  ஒரு மதத்தை ஸ்தாபிக்க வந்தவர் என்றும், ஏழைகளின்  பிரதிநிதி என்றும், புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியவர் என்றும் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு ஏற்றபடி அவரது பிறப்பை மட்டுமல்ல, அவரை நல்லவராகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த கருத்தாக்கம் பாதிக்கிணறு தாண்டுவது எவ்வளவு ஆபத்தானதோ அதுபோலத்தான் என்பதை நாம் உணர வேண்டும். இதன் பின்னணியில், கிறிஸ்து பிறப்பின் சத்தியத்தை விளங்கிக் கொள்வோமாக. 

     

    பொதுவாகவே, ஒரு குழந்தையின் பிறப்பானது பெற்றோருக்கும், சார்ந்த குடும்பத்துக்கும் நிச்சயமாகவே மகிழ்ச்சியான அனுபவமாகும். மற்றவர்களுக்கோ அது ஒரு செய்தியாக மட்டும் அப்போது இருந்துவிடும். குழந்தை தன்னுடைய மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வளருவதால், அதன் தாக்கம் நாளடைவில் பெற்றோர் உட்பட  அநேகருக்கு சலிப்பாகவும், வருத்தமாகவும்  உருமாற வாய்ப்புகள் உண்டு என்பது சமுதாய உண்மை.  ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கி,மு 700ல் ஏசாயா தீர்க்கதரிசியால்  அடிமைகளாய் நம்பிக்கையை தொலைத்த  இஸ்ரவேல் ஜனங்களுக்கும், தொடர்ந்து உலகம் முழுவதிற்கும் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டதே இந்த வார்த்தைகள். இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ற தேடுதலுக்கு விடையே  இப்பிரதியின் செய்தியாகும்.  

    எனவே,கிறிஸ்து குறிப்பிட்ட நாளில்  பிறந்தார் என்பதைவிட கிறிஸ்து ஏற்ற காலத்தில் வெளிப்பட்டார் என்பதே பொருத்தமாக இருக்கும்.   

    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் 

    அவர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் பிறந்தார் என்பது தான் யதார்த்தத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் நமக்காக பிறந்தார் என்று எழுதப்பட்டது கவனிக்கப்படல் அவசியம். இதன் அர்த்தம் என்ன? பாவம் மனிதனை கடவுளை விட்டு நிரந்தரமாகப் பிரித்து விட்டது. முற்றிலும் பரிசுத்தரான கடவுள் பாவத்தை மேலோட்டமாகப் பார்க்க முடியாது. அதேசமயம், பாவத்திற்குரிய தண்டனையையும் மனிதன் தாங்கிக் கொள்ள முடியாதே. சரீர மரணத்தைப் பற்றியே மனுக்குலம் அதிகமாகச் சிந்தித்து தங்களது வாழ்நாட்களின் பெரும்பகுதியை வீணடிக்கிறார்கள். ஐந்தறிவுள்ள உயிரினங்களும் சரீரதேவைக்காகவே சாப்பிடுகின்றன; சரீர தற்பாதுகாப்பிற்காகவே எதிர்வினை ஆற்றுகின்றன. ஆனால், கடவுளின் சாயலான ஒழுக்கநெறி மற்றும் அறிவுநெறியோடு ஜீவாத்துமாவாக படைக்கப்பட்ட பகுத்தறிவுள்ள மனுக்குலம் அப்படியல்லவே! எனவே, மனித வீழ்ச்சியானது நித்திய தன்மையுடையது என்பதுதான் சரியாக இருக்கும்.

    உதாரணமாக, பொய் ஒரு பாவம்; ஆனால், அதை யாரிடம் சொல்கிறோமோ, அதற்கேற்றபடி பரிகாரம் எப்படி மாறுபடுகிறது என்ற அதிர்ச்சி கலந்த உண்மையை இப்படிப் பார்க்கலாம்.

    யாரிடம் ?      பரிகாரம்?
    நம்மைவிட வயது/அந்தஸ்து குறைந்தவர்கள்     அதிகாரம் – என்னையே எதிர்த்துக் கேள்வியா? 
    நமக்கு ஒத்த வயது அல்லது அந்தஸ்துடையவர்கள்இணைசெயல் – நேற்று நீங்கள்  இன்று நான்
    நமது வயதில்/அந்தஸ்த்தில் மேலானவர்கள் நிர்ப்பந்தம் – பணிவு அல்லது  சிறிய தண்டனை
    நித்திய தன்மையுள்ள தேவன்   நித்திய தண்டனை

    எனவே, நித்திய கடவுளுக்கு விரோதமான பாவத்தை நித்திய தன்மையுடைய ஒருவரே நிவிர்த்தி செய்ய முடியும்.மனிதனால் விளைந்த பயங்கரத்தை மனிதனே நிவிர்த்தி செய்ய வேண்டும். ஆனால், பாவ அடிமைத்தனத்திலுள்ள மனிதன் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முடியாதே. மேற்கண்ட உதாரணம் சொன்னதுபோல், தொடர்ந்து நாம் பாவமும் செய்கிறோம்; அதேபோல்,நாம் தேடும் பரிகாரமும் தற்காலிகமானதே. குற்றமனசாட்சி எல்லோரையும் ஆளுகிறபடியால் மரணபயம் எனும் அடிமைத்தனத்திலேயே மனிதர் காலம் செலவிடுகிறார்கள். இருளைக் கண்டு மனுக்குலம் ஏன் பயப்படுகிறது? மரணபயம் இருப்பதாலேயே! இந்நிலையில், கடவுள் ஒரு வழியை உண்டு பண்ணாவிட்டால் மனுக்குலத்திற்கு நம்பிக்கையே கிடையாது.எனவே, நித்திய கடவுளுக்கு விரோதமான பாவத்தை நித்திய தன்மையுடைய ஒருவரே நிவிர்த்தி செய்ய முடியும். கடவுளின் பரிபூரண நீதி பாவத்திற்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்; அதேசமயம், அவரது மிகுந்த அன்பு பாவத்திற்கு பரிகாரம் செலுத்தியுள்ளது. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமால் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. (யோ.3:16).

    கிறிஸ்து மனிதனாகப் பிறப்பது அவசியமெனினும், ஏன் பாலகனாகப் பிறக்க வேண்டும்? என்ற கேள்வி தொடருகிறதே என யோசிக்கலாம்.

    பாலகன் என்பது கீழ்ப்படிதலையும், தாழ்மையையும் அடையாளப்படுத்துகிறது. அவர் பிறந்தபொழுது “ இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.இன்று கர்த்தராகிய கிறிஸ்து எனும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்”.என்று அறிவிக்கப்பட்டதே இதன் சாராம்சம். ரோமர் காலத்தில்  அரசரிடத்திலிருந்து வரும்  பெரும்பாலான செய்திகள்  நல்ல செய்திகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட கட்டாயப்படுத்தப்பட்டாலும்,,  பேரரசருக்கு மகன் பிறக்கும் செய்திதான் “நற்செய்தி” என்று ஜனங்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட்டது. பேரரசனுக்கு பிறக்கும் வாரீசு மூலம் இந்த சாம்ராஜ்யம் நிலைபெற்று ஜனங்கள் சுபிட்சமாக தொடர்ந்து வாழ முடியும் என்ற அடிப்படையிலேயே இது நற்செய்தி என்று அறிவிக்கப்பட்டது.  கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்த வரலாறே சுவிசேஷங்களில் நற்செய்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாய், ஜீவகாலம் முழுவதும் மரண பயத்தினாலே அடிமைப்பட்டுள்ளபடியால் அவர்களை  விடுதலை செய்யும்படி,  அவரும் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபி.2:14). நான் எதற்கும், யாருக்கும், எந்தக் காலத்திலும் பயப்பட்டதில்லை என்பேனாகில் நிச்சயமாக பொய் சொல்கிறவனாவேன். சமீபத்தில், கொரோனா தாக்கத்தால் என்ன நடக்குமோ என்று உலகமே திகிலில் இருந்ததே! குழந்தைகள் உட்பட கோடிக்கணக்கானோர் சடுதியில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டதையும், அழுவதற்கு யாரும் இல்லாமல் பிணங்கள் தெருக்களில் வீசப்பட்டதையும் நம் வீடுகளில் இருந்தே பார்க்க நேரிட்டதே?   இப்படி, மரணபயமே மனிதனின் எல்லா பயத்திற்கும் அஸ்திபாரமாக இருக்கிறது. பயமானது ஒரு  அடிமைத்தனம் என்றே வேதம் சித்தரிக்கிறது. இருளைக் கண்டு மனிதன் எதற்கு பயப்படவேண்டும்?  மரணபயம் இருப்பதாலேயே! பயத்தைப் பற்றிய நமது எதிர்வினை வேண்டுமானால் குழந்தை பருவத்தில் இருந்ததைவிடவும் தற்போது மாறுபட்டதாக இருக்குமேயன்றி, பயமே எனது வாழ்வில் இல்லை என்று எந்த மனுஷனும்/மனுஷியும் சொல்ல முடியாது.

    நன்மை/தீமையை வகையறுக்கும் அதிகாரமுடைய கடவுளால் படைக்கப்பட்ட மனுக்குலம் அவரைச் சார்ந்து, பிறப்பு முதல் முழுமையாகக் கீழ்ப்படிவதின் மூலமே வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டடைய முடியும். “என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” என்ற அனுபவமுள்ள மனுக்குலம் இந்தக் கீழ்ப்படிதலைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், கிறிஸ்து முற்றும்முடிய தமது பிறப்பு முதல் சிலுவை மரணம் வரை இந்தக் கீழ்ப்படிதலை நிறைவேற்றினார். சிறுபிராய முதல் அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமறியாத பரிசுத்தராக வாழ்ந்தார் என்பது அவர் நமக்காகப் பிறந்தார் என்பதின் அடையாளமாகும். இப்படி, அவர் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதை பாலகனாகப் பிறந்த அவரது தாழ்மையும், அவரது கீழ்ப்படிதலும் நமக்கு  மெய்ப்பித்தது எனலாம்.“இவர் என்னுடைய நேசகுமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று பரத்திலிருந்து வந்த சத்தம் அவரது சிறுபிராய வாழ்விற்கான முழு அங்கீகாரமாகும். இயேசு பாலகனாகப் பிறந்ததின் மூலம் பாவத்தினால் விளைந்த மனித ஆழத்தின்நம்பிகையற்ற நிலையை தெளிவாக எடுத்துக் காண்பித்துள்ளார். அவர் தமது ஜனங்களின் பாவத்தை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதாலே அவருக்கு இயேசு என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

    நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்

    குமாரன் என்பது தந்தையின் அதிகாரத்தையும், ஞானத்தையும் உடையவர் என்பது பொருளாகும். தேவகோபாக்கினையின் கீழுள்ள மனிதன் இந்த சிலாக்கியங்களை அனுபவிக்க முடியாது. சிருஷ்டிப்பில் கடவுள் அருளிய இந்த அதிகாரத்தையும், ஞானத்தையும் மனிதன் தனது பெருமையாலும், கீழ்ப்படியாமையாலும் சிதைத்து விட்டான்.  நன்மை-தீமையை வகையறுக்கும் அதிகாரத்தை மனிதன் கையிலெடுத்து சுயநலத்தோடு அதை பிரயோகிக்கிறான். மனிதன் கடவுளைப் பற்றி அறிய முடியுமேயன்றி கடவுளை அறியவே முடியாது.  இந்நிலையில் சூழ்நிலை, கலாச்சாரம், காலசீதோஷ்ணநிலை, பொருளாதாரத்திற்கேற்றபடி அவ்வப்போது சுயபரிகாரமும் தேடிக் கொள்கிறான். இப்படி, பாவத்திற்கு பயப்படுவதைவிடவும், பாவத்தின் விளைவிற்கு பயப்படுவதே மனித இயல்பாக மாறிவிட்டது. இதில் விளையும் ஏமாற்றத்தை புரிந்து கொள்ளக்கூடிய ஞானமும் மனுக்குலத்திற்கு கிடையாது.உலக வல்லமை பெலவீனமாகவும், உலக ஞானம் பைத்தியமாகவும் உள்ளதென தமது கல்வாரி மரணத்தின் மூலம் குமாரனாகிய கிறிஸ்து வெளிக்காட்டியுள்ளார். இதைத்தான்  இருளில் பிறந்த மனிதன் இருளில் வாழ்கிறான் என்று அறியலாம். மனுக்குலம் இழந்த வல்லமையையும், ஞானத்தையும் மனந்திரும்பி தமது குமாரனை  விசுவாசிப்பவர்களுக்கு கடவுள் வாக்கு பண்ணியுள்ளார்.  “இவர் என்னுடைய நேசகுமாரன்; இவருக்கு செவிகொடுங்கள்” என்று பரத்திலிருந்த வந்த சத்தம் இதை தீர்க்கமாகச் சொல்லுகிறது. இப்படி குமாரனை உடையவன் ஜீவனை உடையவனாகிறான். (1 யோ.3:12).  எனவேதான், இயேசு கிறிஸ்து: “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார்.  மட்டுமல்ல, குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது இரண்டாம் வருகையில் மனிதனின் அந்தரங்கங்களைக் குறித்து நியாயந்தீர்க்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார் என்பதை குமாரனாக அனுப்பப்பட்டார் என்பதிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது.  

    இயேசு கிறிஸ்து பாலனாகப் பிறந்தது மனிதனின் ஆழத்தை வெளிப்படுத்தின நிலையில், அவர் குமாரனாகக் கொடுக்கப்பட்டது பிதாவின் உயரம் இன்னதென்பதை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. அவர் பாலகனாய்ப் பிறந்து தாம் நூற்றுக்கு நூறு மனிதன் என்பதையும், அவர் குமாரனாகக் கொடுக்கப்பட்டு  தாம்  நூற்றுக்கு நூறு கடவுள் என்பதையும் நிருபித்தார். இப்படி, இயேசு கிறிஸ்து மட்டுமே பரிபூரண பரிசுத்தமான கடவுளுக்கும், பரிபூரண வீழ்ச்சியடைந்த மனுக்குலத்திற்குமிடையே ஒரே மத்தியஸ்தர் என்பது கிறிஸ்துமஸின் ஆணித்தரமான நற்செய்தியாகும். அவரது இரண்டாம் வருகை அதிக சமீபமாகத் தெரிகிற  இந்தக் காலத்தில் மனந்திரும்பி, அவரை விசுவாசித்து அவர் மூலமாக மட்டுமே வரும் நித்திய இரட்சிப்பை பெற்றுக் கொள்வதே உண்மையான  கிறிஸ்து பிறப்பினால் ஏற்படும் நித்திய அனுபவமாகும். இதை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து இலவசமான நித்திய இரட்சிப்பைப் பெற அழைக்கப்படுகிறீர்கள். 


    இந்த செய்தி போதகர் ஜான் நெல்சன் இஸ்ரேல் அவர்கள் எழுதியது. 

    Read More
    30 Nov
    0

    சங்கீதம் 27

    பிரச்சனைகள் போராட்டங்கள் மத்தியில் நம்பிக்கை

    சங்கீதம் 27

    இந்த சங்கீதத்தில் தாவீது தன் வாழ்விற்காக ஜெபிக்கிறார். இந்த சங்கீதத்தை குறித்து Spurgeon இப்படியாக கூறுகிறார், சவுல் தாவீதை விரட்டும் போது எதிரிகளால் சூழ்ந்திருக்கும்போது, தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து, தனிமையாக மன அழுத்தம் நிறைந்த நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் என்று கூறுகிறார். உன் வாழ்வில் பிரச்சனை மோதியடிக்கும்போது நீ எங்கே போவாய்? இக்கட்டான நேரங்களில் எப்படி ஜெபிப்பது என்பதை தாவீது இந்த சங்கீதத்தின் முலம் நமக்கு கற்றுத்தருகிறார். இக்கட்டான சூழ்நிலையில், யாவராலும் கைவிடப்பட்ட நிலையில்  இருப்பாயானால் நீ இந்த சங்கீதத்தை வாசிக்கலாம்.

     

    இந்த சங்கீதம் தாவீது தேவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆரம்பிக்கிறது. வசனம் 1 “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” இந்த வசனத்தில் தாவீது தேவனை “என் வெளிச்சம்”, “என் இரட்சிப்பு”, “என் ஜீவனின் பெலனானவர்” என்ற மிக நெருக்கமான உறவை வெளிப்படுத்துகிறார்.

    வெளிச்சம்- இருள் சூழ்ந்த நிலையிலிருந்து தாவீதை மீட்டது. நம்மை இருளின் அந்தகாரத்திலிருந்து விடுதலையாக்குகிறது. வெளிச்சம் நம்மை சரியான பாதையில் நடத்துகிறது. சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

    இரட்சிப்பு- தேவன் தாவீதை சவுலின் கையிலிருந்து காப்பாற்றினார். அவர் நம்மை மரணத்தைவிட்டு நீக்கி ஜீவனுக்கு உட்படுத்தியிருக்கிறார். யோவான் 5:24 “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    என் ஜீவனின் பெலனானவர்– தேவன் தாவீதை தோல்வியிலிருந்து விடுவித்தார். தேவ பெலன் நமக்கு வெற்றியை வசதிசெய்கிறார். தேவனுடைய பெலத்தால் முற்றிலும் ஜெயம் கொள்கிறோம். ரோமர் 8:37 “ இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

    தேவனின் இந்த மூன்று குணாதிசயங்களை நம் வாழ்வின் பிரச்சனையில் நம்பிக்கையை கொடுக்கிறதாயிருக்கிறது. நாம் ஆராதிக்கிற ஆண்டவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய குணாதிசயங்கள் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் எப்பேர்பட்ட எதிரிகளுக்கும் பயப்பட அவசியமில்லை.  எரேமியா 17:5 “மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு,  கர்த்தரை  விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர்  சொல்லுகிறார்”. எரேமியா 17:7 “கர்த்தர்மேல்  நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்”.

    நீ யாரை சார்ந்திருக்கிறாய்? தாவீது தன் இக்கட்டில் தேவனை சார்ந்திருக்கிறான்.

    வசனம் 2-3 “என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்”. 

    வசனம் 2-3-ல் தாவீது தேவன் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகிறான். தாவீது, தேவன் தன் வாழ்வில் கடந்த காலத்தில் செய்த நன்மையையும், வெற்றியையும் நினைத்து நான் இப்பொழுது தோற்பதில்லை என்கிறான்.  தாவீது தன் வாழ்வில் தேவன் செய்த கிரியைகளை நினைத்து தேவன் மாறாதவர் என்று அறிந்திருந்தான். அவர் எப்பொழுதும் அதே வல்லமையுள்ளவர், உண்மையுள்ளவர் என்பதை உணர்ந்தான். தேவன் உன் வாழ்வில் கடந்த காலத்தில் செய்த அனைத்து காரியங்களையும் நினைத்து அவர் இன்றும் இருக்கிறார் என்று நினைக்கும்போது அவர் நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.

    தேவன் நமக்கு ஏற்படுத்தி கொடுத்த நம்பிக்கையில் ஈடுபாடு- வசனம்- 4 கர்த்தரிடத்தில்  ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்”.  தாவீது தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுகிறான்.

    சங்கீதம் 84: 1-4 “1. சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2. என் ஆத்துமா கர்த்தருடைய  ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 3. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 4. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்.”

    தாவீது இதய துடிப்பு தேவனை ஆராதிப்பது. இன்று நீ தேவ பிரசன்னம் இருக்கும் இடத்தில் காணப்பட வேண்டும். எபி.10:25. தாவீதின் இலக்கு தேவனை நேசிப்பது, தேவனின் சமுகத்தை தேடுவது. இது தான் ஒவ்வொரு விசுவாசியின் இலக்காக இருக்க வேண்டும்.தாவீது தேவனையே சார்ந்திருக்க ஒப்புக்கொடுத்தான். அவன் வாழ்வில் அனைத்து தேவைகளுக்கு தேவனை சார்ந்து கொண்டான்.  நாம் அதிகமாக நேரம் ஜெபத்துள் சார்ந்துகொள்ள வேண்டும். நாம் ஜெபிக்க அலைக்கபடுகிறோம். தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார். எரேமியா 33:3, பிலி. 4:6-7, மத். 7:7. நாம் தேவனை சார்ந்திருக்கும் போது போராட்டங்கள், கவலைகள் மீது வெற்றியுண்டு. 

    நாம் தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பது நமக்கு ஆறுதலை கொடுக்கிறது வசனம் 5-6 கற்றுக்கொடுக்கிறது. தேவன் தாவீதை கூடார மறைவில் வைத்து காப்பாற்றினார். அவர் அவனை எதிரியின் மத்தியிலிருந்து காத்தார். உனக்கு ஏற்படுகிற பிரச்சனை போராட்டங்களில் பத்திரமாக காப்பார். உதாரணமாக, தானியேலின் வாழ்வை சிந்தித்து பாருங்கள். தேவன் நமக்காக ஓர் சிறப்பான இடத்தை வைத்துள்ளார். அவருடைய கூடார மறைவில் வைத்து காக்கிறார். நமக்கு பூரணபாதுகாப்பு உண்டு. உன் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுதலையின் நம்பிக்கை உண்டு. அவர் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி நம்மை மீட்டுள்ளார். ஆகவே நமக்கு பூரண நம்பிக்கை உண்டு. யோவான் 10:28-30. நீ எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இயேசுவண்டை வா. அவர் உன்னை காப்பார். 


     

    Read More